இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடப்பா எல்லா வகையான உணவுகளுக்கும் தொட்டு சாப்பிடலாம்

உருளைக்கிழங்கு.கேரட்.பின்ஸ். பட்டாணி. தக்காளி 3 இவையெல்லாம் சேர்த்து ஒருகப். பயத்தம்பருப்பு 1கப ் இவற்றை குக்கரில் போட்டு 4 கப்தண்ணீர்.ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள் சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும்.பிறகு 4ஸ ்பூன் தேங்காய் துருவி மிக்ஸி ஜாரில்போடுங்க.அதனுடன் 2 ஸ்பூன் போட்டுக்கடலை. பட்டைகிராம்பூ.ஏலக்காய். பச்சைமிளகாய் 5 (காரத்திக்கு ஏற்றார்போல்)) இவற்றை மிக்ஸி ஜாரில் நைசாகஅரைத்து.குக்கரில் நாம் வைத்திருக்கும் பருப்புடன் சேர்த்து. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து மல்லித்தழை. கருவேப்பிலை போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சூப்பரான கடப்பாரெடி.இட்லி.தோசை.சப்பாத்தி.பூரி. ரவாதோசை.கோதுமை தோசை எல்லா வைகையான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

சாப்பாடு ரெடி. சாதம் .முருங்கைக்காய் சாம்பார்.கீரை கூட்டு. உருளைக்கிழங்கு காரம் தக்காளிரசம். சூப்பரான மதிய சாப்பாடு ரெடி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்

 முருங்காய் சாம்பார் . பருப்பு 1 கப் வேகவைத்து தனியாக எடுத்து வையுங்க‌ (துவரம்பருப்பு நன்றாக வேகவைத்து குழைவாக இருக்க வேண்டும்)முருங்காய்யை சிறிய சிறியதாய் நறுக்கி வைத்துக்கவும். வெங்காயம்1தக்காளி 2 சிறிதாக வெட்டி வைத்துக்கவும்.புளி தண்ணீர் சிறிது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு காய்ந்ததும் கடுகு. உபருப்பு சிறிதளவு கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் ஒன்று நறுக்கி வெங்காயம் தக்காளி இவை அனைத்தும் சேர்த்து எண்ணையில் வதக்கி.புளி தண்ணீர் சேர்த்து உப்பு.சாம்பார் மிளகாய்தூள் (இவைகளை உங்களுக்கு தேவையான அளவு)காரம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு நாம் வேக வைத்த பருப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வையுங்க. முருங்க்காய் வெந்ததும் இறக்குங்க பிறகு மல்லித்தழை பெருங்காயத்தூள் சேர்த்திடுங்க முருங்கக்காய் சாம்பார் ரெடி. பிறகு ஈசியான உருளைக்கிழங்கு காரம் குக்கர் அருப்பில் வைத்து 3.ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு. வெங்காயம் இரண்டு நைசாய் நறுக்கி கடுகுடன் சேர்த்து ஒன்றாக வதக்குங்க. வதங்கும் போதே உருளை தோல் சீவி சின்ன சின்னதாய் கட் செய்து வெங்காயத்துடன் சேருங்க.மிளகாய்த் தூள் காரம் உங்க

காரப்பொரி

 2 கப் பொரி அடுப்பை பற்ற வைத்து. வாணலியில் இந்தப் பொரியை கரகரப்பாக வறுக்கவும்.பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு. வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு.ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து நைசாக மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தது 4 காய்ந்த மிளகாய்.கருவப்பிலை. மஞ்சளதூள் அரை டீஸ்பூன். உப்பு தேவையான அளவு பிறகு பொடி செய்து வைத்திருக்கும்.மிளகு சீரகப்பவுடர் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி பொரியையும் சேர்த்து.எல்லா பொரியிலும் உப்பு.காரம்கசேர்ந்து கரகரப்பாக இருக்கும் போது.பாத்திரத்தில் மாற்றவும்.காரப்பொரி ரெடி. (உப்பு.காரம் உங்களுக்கு தேவையான அளவு ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்).      இதேபோல் அவல் பொரிப்பொறி. சோளப்பொறி(இவை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சுத்தம்செய்து தரமானதாக கிடைக்கும் அதனை வாங்கி நம்முடைய விருப்பத்தின் போல் மொரமொரப்பாக) வறுத்துக் கொள்ளலாம். அனைத்திற்கும்.உப்பு. காரம் உங்களுடைய விருப்பம் போல் சேர்க்க வேண்டும்.

இனிப்பு பொரி கார்த்திகை ஸ்பெஷல்

பொரி ஒரு கப்( நெல் பொரி அல்லதுஅவல் பொரி) அடுப்பை ஆன் பண்ணுங்க. வாணலியை அடுப்பில் வைத்து மொரமொர என பொரியை  சூடு செய்து பாத்திரத்தில் வைத்து விடுங்கள். பொட்டுகடலை. எள்ளு. தேங்காய் துருவி சிவக்க வறுத்து பொரியுடன் சேருங்கள் .2கப் வெல்லம் சுத்தம் செய்து பாகு காய்ச்சி. (ஒரு தட்டில் தண்ணீர் வைத்து காய்ச்சிய பாகுவை அதில் விடுங்க அந்த வெல்லம் கையில் எடுக்கும் போது. பந்து போல் உருண்டு வரும் ) வெல்லப்பாகு எடுத்து பாத்திரத்தில் வைத்துள்ள பொரியுடன் சேருங்கள். நல்லா கிளறி சூடு ஆறுவதற்க்குள்.அரிசி மாவு தொட்டு உருண்டைகளாக பிடித்து அடிக்கடி வைக்கவும். (பொரி ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க வராது அப்படி இல்லை என்றால் சூடாக இருக்கும்போதே பொரியை அழுத்தி மூடி வைக்கவும்) கார்த்திகை பொரி ரெடி.

மஸ்ரூம் மசாலா

 மஸ்ரூம் 250 கிராம் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (ஒரு அகலமான பாத்திரத்தில் 3.தண்ணீர் விட்டு அதில் 1ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு மஸ்ரூம் ஐ அலசிவிட்டு கொதிக்கும் வெந்நீரில் போட்டு10 நிமிடம் மூடி வைக்கவும்.பிறகு அதிலுள்ள கருப்பாக இருக்கும் பகுதிகளை  நீக்கிவிட்டு சுத்தம் செய்து தட்டில் வைத்துக் கொள்ளவும்)அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை டீஸ்பூன் மிளகுத்தூள்.கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும். பட்டை .கிராம்பு. ஏலக்காய் பொடி செய்து.அதில் தூவவும் வாசனை நன்கு வரும் போது‌ வெங்காயம் 4 சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி 2 பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன். மல்லித் தூள் அரை டீஸ்பூன். பிறகு நாம் கலந்து வைத்திருக்கும் மஸ்ரூம்  இதனுடன் சேர்த்து. சிறிதளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை ஆப் நிறுத்தவும்.பின்புஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதன்மேல் மல்லித்தழை தூவ

கேசரி போலி

ஒரு கப் ரவையை வாணலியில் நெய் ஒரு ஸ்பூன் போட்டு வறுக்கவும். ஒரு கப்புக்கு 2 கப் தண்ணீர் விடுங்கள்.தண்ணீர் கொதித்ததும் அதில் கொஞ்சம் கேசரி பவுடர் போடுங்க. நல்லா கொதிக்கும்போது ரவையை அதில் கலந்து விடவும். அடுப்பு தீயை குறைத்து விடுங்கள். அதன்பிறகு .1கப் ரவைக்கு 2சீனீகப் சேர்த்து .அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் சிறிதுநேரம் வேகவைக்கவும்.  4 ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய் பவுடர் சேர்த்து. நெய் பிரிந்து வரும்பொழுது கேசரியை இறக்கிடுங்க.பின்னர் மைதா மாவு அதில் கொஞ்சம் தண்ணிர் விட்டு துளி உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும் 15 நிமிஷம் ஊறவும் பின்னர் எலுமிச்சை அளவு மைதா மாவை உருட்டி சப்பாத்திக் கல்லில் வட்டமாக தேய்த்து அதில் கேசரியை ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும் நல்லா மூடிட்டு.மறுபடியும் மாவு தொட்டு ரவுண்ட் சப்பாத்தி மாதிரி செய்து.பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்த்ததும். இந்த கேசரி போலியை எடுத்து தோசைக்கல்லில் போட்டு. இரண்டு பக்கமும் நெய் விட்டு ஒரு தட்டில் எடுத்து அடுக்கி வைக்கவும். கேசரி போலி ரெடி.

பாதாம் பச்சடி

பாதம் பச்சடி பாதாம் பருப்பு 20. பூண்டு 5. புளிக்காத தயிர் ஒரு கப். பச்சை மிளகாய் 2 (காரத்திற்கு ஏற்ப) கொத்தமல்லி சிறிதளவு. சர்க்கரை சிறிதளவு (1 டீஸ்பூன்)சீரகத்தூள் அரை டீஸ்பூன். பாதாம்பருப்பு 20 பாதாமை ஊற வைத்து ஊறவைத்து தோலுரித்து விட்டு.ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு (வேகவைத்து) அதில் பச்சை மிளகாய். தயிர். கொத்தமல்லித்தழை. சர்க்கரை.தோலுரித்த பாதாம் பருப்பு இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து அதில் தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் சீரகத்தூள் கலந்து வைக்கவும் பாதாம் பூண்டு பச்சடி ரெடி. சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 2வாரம் வரை சாப்பிடலாம்.

பாதாம் முந்திரி லட்டு எப்படி செய்வது வாங்க

பாதாம் 200 கிராம். முந்திரிப் பருப்பு 200 கிராம். பாசிப் பருப்பு 50 கிராம். பொட்டுக்கடலை 50 கிராம். நெய் 150 கிராம். ஏலக்காய் 10 கிராம் பருப்பு வகைகள் அனைத்தையும் லேசாக வறுக்கவும். மிக்ஸி ஜாரில் நைஸாக பொடி செய்துக்கொள்ளவும். அதனுடன சீனி.500 கிராம். ஏலக்காய் 10 கிராம் நைஸாக பொடித்து கலந்து பிறகு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் 4.5 முந்திரிப்பருப்பை சின்ன சின்னதாக நறுக்கி. நெய்யில் வறுத்து இந்த மாவுடன் கலந்து விடவும். சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக பிடித்து. லட்டுகளாக செய்யவும். பாதாம்.முந்திரி லட்டு ரெடி.

ஈசி கொஸ்து

வாணலியில் எண்ணெய் விட்டு.அதில் 3 கத்திரிக்காய். 3 தக்காளி.ஒரு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கிய பிறகு ஆறியதும் மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும்.சீரகம்.மிளகாய்.2 கருவேப்பிலை தாளித்து நீங்க அரைத்த கிரேவியை வாணலியில் விட்டு நன்றாக சுத்தி கிளறவும். பிறகு தேவையான அளவு உப்பு. மிளகாய்தூள்.1ஸ்பூன். மல்லித் தூள்.ஒரு டீஸ்பூன். சீரகத்தூள் அரை டீஸ்பூன். சேர்த்து நன்றாக வதக்கி விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தும் தோசை மாவு அல்லது அரிசி மாவு அரை டீஸ்பூன் சிறிதளவு எடுத்து அதல் கலந்து கொதிவிட்டு திக்கானது இறக்கவும் பிறகு பெருங்காயத்தூள். சிறிதளவு மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி வைக்கவும் சூப்பரான கொத்து ரெடி. இட்லி.கோதுமை தோசை. ரவாதோசை.ஊத்தப்பம் இவை.எல்லாவற்றிறகு சேர்த்து சாப்பிடலாம்

பயறு லட்டு

 பயத்தம்பருப்பு 500கிராம்.பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் நைசாக அரைக்கவும். அதில் குழவுசீனீ 1கிலோ.முந்திரி 50 கிராம். ஏலக்காய் 10 கிராம். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில்  ஒன்றாக சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் நைசாக அரைக்கவும். அதில் சேர்த்து அதனுடன் ஏலக்காய் பவுடர் சேர்த்து கைகளால் நன்றாக கலந்து விடவும் .பிறகு வாணலியில் நெய் 250 கிராம் விட்டு.காய்ந்ததும் அதில் 50 கிராம் முந்திரிப்பருப்பு. (சின்ன சின்னதாக நறுக்கி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு)  நெய் மற்றும் முந்திரி பருப்பை அப்படியே நாம் கலந்து வைத்திருக்கும். பயத்தம்பருப்பு பவுடரில் சுற்றி ஊற்றி நன்கு கிளறி விடவும். எல்லா புறமும் நன்கு கிளறி. சூடு ஆறுவதற்குள் சின்ன சின்ன உருண்டைகளாக பயத்தம் பருப்பு லட்டு செய்யவும். பயத்தம் பருப்பு லட்டு ரெடி. (இதேபோன்று பயத்தம்பருப்பு க்கு பதிலாக. ரவையை வாணலியில் லேசாக வறுத்து விட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் .இதே போன்றுதான் ரவா லட்டு செய்ய வேண்டும்)

அதிரசம் எப்படி செய்யலாம் வாங்க

 பச்சரிசி ஒரு கிலோ தண்ணீர் விட்டு அலசி. கொஞ்ச நேரம் அந்த ஈரம் வெளில போற அளவுக்கு கொஞ்ச நேரம் வெள்ளைத்துணியில் போடுங்க.பிறகு ஒரு பாத்திரத்தில் மாத்துஙக. மெஷின்ல். அப்படி இல்லேன்னா நம்ம மிக்ஸியில் போட்டு அரைத்துங்க. அரைக்கும் போது கொரகொரப்பாக இருக்கலாம். அப்பதான் நல்லா இருக்கும்.உங்க விருப்பம்அரைத்துமுடிஞ்சதும்வெறும் வாணலியில் லேசாக வருத்துக்கனும். வெல்லம் 400 கிராம் இனிப்பு அதிகம் தேவைன்ன 500 கிராம். சுத்த பண்ணிட்டு பாகு காய்ச்சி.நல்லா கெட்டியானதும்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து அடுப்பில் இருக்கும் அந்த வெல்லப்பாகு கொஞ்சம் எடுத்து.அந்த கிண்ணத்தில் ஒரு துளி போடுங்க.அதுல விட்டத்துக்கு அப்புறம் ஒரு ரெண்டு செகண்ட் வெயிட் பண்ணுங்க அதுக்கப்புறம் கையில எடுத்து உருண்டு பந்து மாதிரி அது உருண்டு வரும் அந்த வெல்லப்பாகை இறக்கி விட்டு நீங்க மாவு பண்ணி வச்சிருக்கும். மாவை எடுத்து வெல்லப்பாகுடன் ஏலக்காய் 20 கிராம்.சேர்த்து நல்ல கிளறி விடுங்க. அப்படியே நல்ல கிளறி விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்துவிடுங்கள். அதிரசமாவு ரெடி. அந்த அதிரச மாவை ஒரு நாள் நல்லா ஊறவிடுங்க.ஒரு நாளைக்கு பிறகு நீங்க என்ன

பூண்டு வெங்காயம் அரைத்து விட்ட கார குழம்பு

 கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடுங்க.காய்ந்ததும் மிளகு சீரகம் தலா 2 ஸ்பூன். உளுத்தம்பருப்பு.துவரம் பருப்புதலா1டீஸ்பூன்.கறிவேப்பிலை ஒரு சிறிதளவு வெந்தயம் அரை டீஸ்பூன் மிளகாய் 5. இவை அனைத்தையும் நன்றாக வறுத்து ஆற வைத்து.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைக்கவும். சிறிதளவு புளி ஊற வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் 3 கரண்டி விட்டு எண்ணெய் காய்ந்ததும். கடுகு.வெந்தயம். சீரகம்தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும அதனுடன் வெங்காயம் உரித்து சுத்தம் செய்து ஒரு கப்.பூண்டு 2 கப். தக்காளி2 நன்றாக கழுவி  நைஸாக அரிந்து. அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து ஒரு கப் எடுத்து அதில் சேர்த்து. சிறிதளவு உப்பு. வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்றாக 15 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சூப்பரான வெங்காயம் பூண்டு அரைத்துவிட்ட குழம்பு ரெடி. இட்லி. தோசை. சாதம். கோதுமை தோசை. ரவா தோசை. கல் தோசை இவை அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

பூண்டு தக்காளி சட்னி எப்படி செய்வது வாங்க

 வாணலியை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு காய்ந்ததும்.10 காய்ந்த மிளகாய்.2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு .பூண்டு 15 பல். தக்காளி-3 .உப்பு தேவையான அளவு  இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு தட்டில் ஆறவைக்கவும்.பிறகு  மிக்ஸி ஜாரில் நைஸாக அரைக்கவும் சூப்பரான பூண்டு தக்காளி சட்னி ரெடி

மீல்மேக்கர் குழம்பு எப்படி செய்வது

 பிரஷர்பான்அடுப்பில் வைத்து. 2ஸ்பூன் எண்ணைய் விடுங்க. காய்ந்ததும் பிரிஞ்சி இலை. பட்டை. 2 வெங்காயத்தை நைசாக நறுக்கி அதில் சேர்த்து வதக்குங்க. 4 தக்காளி நைசாக நறுக்கி வதக்கவும். இஞ்சிபூண்டு1டீஸ்பூன். தக்காளியுடன் சேர்த்து வதக்குங்கள் வெண்ணீரில் மீல்மேக்கரை 5 நிமிஷம் போட்டு பிழிந்து மீல்மேக்கரை போட்டு வதக்குங்க. தேவையான அளவு உப்பு..மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து10நிமிடம் கொதிக்கவிடுங்க.பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வையுங்க.மீல்மேக்கர் குழம்புரெடி.

கொழுக்கட்டை.

 உளுத்தம்பருப்பு கால் கப் எடுத்து தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் ஜாரின் 4 பச்சை மிளகாய். இந்த உளுத்தம்பருப்பு உப்பு வைத்து. கொரகொரப்பாக அரைத்து .வாணலியை அடுப்பில் வைத்து. கடுகு. உளுந்து‌ கருவேப்பிலை. போட்டு வதக்குங்க.அதில் அரைத்து வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை கலந்திடுங்க. வெந்து போயிடும். அரை மூடி தேங்காயைத் துருவி அதில் கலந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வையுங்க. இனிப்பு கொழுக்கட்டை எப்படி பண்றதுன்னு பார்த்தோம். அது போல தான் இந்த கார கொழுக்கட்டையும் செய்யனும்.மாவு ரெடி செய்து இந்த கார பூரணத்தை உள்ளே வைத்து மூடி வேக வைத்து எடுங்க கார கொழுக்கட்டை ரெடி.

மோதகம்.... பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் ஸ்வீட் எப்படி பண்றதுனு பார்க்கலாம் வாங்க

4 ஸ்பூன் கடலை பருப்பு. குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு .அரை பதத்துக்கு வேக விடுங்க. வெயிட் போடாமல் ஒரு அஞ்சு நிமிஷம் வெச்சாலே போதும் வெந்த பருப்பை ஆறியதும் மிக்சியில் நைசாக அடிச்சுருங்க. தேங்காய் 2 கப். வெல்லம் 2 கப். எல்லாம் சுத்தம் பண்ணி எடுத்து வச்சுக்குங்க. அடுப்பில் அடி கனமாக உள்ள கடாய்  வையுங்க. வெச்சிட்டு வெள்ளம் கொஞ்சம் தண்ணி விட்டு கரைந்ததும். தேங்காய்  சேருங்க .கொஞ்சம் நல்ல திக்கானதும் அடுப்பை நிறுத்திட்டு இந்த கடலை பருப்பு சேர்த்து நல்லா கிண்டுங்க‌ அதுக்கப்புறமா அடுப்பு பத்த வைச்சு.நல்லா திரண்டு வரும் போது.அதில்10கிராம் ஏலக்காய்த் தூள்.2 ஸ்பூன் நெய் விடுங்க.சுருண்டு சீக்கிரமேபூரணம் ரெடியாயிடும் பூரணம்.ரெடியானதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சிருங்க.பிறகு நம்ம மாவு ரெடி பண்ணனும் ஒரு பாத்திரத்தில் ஒன்னேகால் டாம்ளருக்கு தண்ணீர் ஊற்றி நல்லா கொதி வரும்போது. அரை உப்பு போடுங்க.1 ஸ்பூன் நல்லெண்ணைய் விடுங்க.அடுப்பைஆஃப் பண்ணிட்டு‌‌.ஒரு டம்ளர் பச்சரிசி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து.கட்டி இல்லாமல் நன்கு கிளறிவிட்டு.அடுப்பில் வைத்து கொஞ்சம் நேரம் வேகவையுங்க.வெந்ததும் இறக்கி வச்

ஈசி சாம்பார் பத்து நிமிடத்தில் ரெடி

 குக்கரை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 4 ஸ்பூன் விடுங்க. காய்ந்ததும் கடுகு. சீரகம். வெங்காயம் நறுக்கியது 2. எல்லாத்தையும் வதக்குங்க பிறகு மிக்ஸி ஜாரில் 4 .தக்காளி.  கத்தரிக்காய் 1  லேசாக அடிங்க. பின் வதங்கிய வெங்காயத்துடன் கலந்து. மிளகாய் தூள் 2 ஸ்பூன். மல்லித் தூள் 1 ஸ்பூன். தேவையானளவு உப்பு. தண்ணீர் .தோசை மாவு 2 ஸ்பூன் (இல்லையென்றால்) கடலை மாவு 1 ஸ்பூன் அதில்   கரைத்து விடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி விடுங்க. இந்த ஈசி சாம்பார் ரவா தோசை. கோதுமை தோசை. இட்லி. எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். பத்தே நிமிடத்தில் ஈசி சாம்பார் ரெடி.

பயத்தம் பருப்பு சாம்பார்

பயத்தம் பருப்பு ஒரு கப். குக்கரில் வேகவைத்து எடுங்க. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் 2 ஸ்பூன் விட்டு. கடுகு .உளுத்தம் பருப்பு. பச்சை மிளகாய் 3.  வெங்காயம் 2 தக்காளி 4 நைசாக நறுக்கி வதக்கவும் .பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் .அரை ஸ்பூன் மஞ்சள்தூள்.சோம்பு அரை ஸ்பூன். தேங்காய் துருவி நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை 3 ஸ்பூன்  இது எல்லாத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து  வதக்கிய வெங்காயம் .தக்காளி. பருப்புடன் சேர்த்து. 15 நிமிஷம் கொதிக்க விடுங்க. பிறகு பயத்தம் பருப்பு சாம்பார் ரெடி.  கருவேப்பில்லை. கொத்தமல்லி தூவி இறக்கி விடுங்க. இட்லி. தோசை. சப்பாத்தி. ரவா தோசை. கோதுமை தோசை எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம் .

இனிப்பு சட்னி செய்யலாம்

 பச்சை மிளகாய் 3. புளி சிறிதளவு .உப்பு தேவையான அளவு  பேரிச்சை 25 கிராம். (அரைக்க முடிவிவ்லை என்றால் லயன்டேட்ஸ் சிரப் உபயோகிக்கலாம் ). வெல்லம் இனிப்புக்கு தேவையான அளவு.  முந்திரி  10 இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் ஒருவாரம் வரை  கெட்டுப் போகாமல் இருக்கும் ப்ரிஜ்ல் வைத்து உபயோகம் பண்ணுங்க.

தால் பூரண்எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

 தால் பூரண் சப்பாத்தி சூப்பராக இருக்கும்.  எல்லாருக்கும் பிடிக்கும். எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க. கோதுமை மாவு ஒரு கப். மைதா மாவு ஒரு கப். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு  போல் பிசைந்து வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப். குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் ஜாரின் கால் கப் சீனி. 10 ஏலக்காய் சேர்த்து  அரைத்துக்கொள்ளவும இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் .பிசைந்து வைத்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து. அதன் நடுவில் இந்த பருப்பு உருண்டை வைக்கவும். அதை மூடி கோதுமை மாவை தொட்டு மறுபடியும் சப்பாத்திகளாக தேய்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து. சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.அதன் மேல் நெய் தடவி அடுக்கவும். தால் பூரண் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள ஜாம். இனிப்புச் சட்னி .உங்களுக்கு விருப்பப்பட்ட குருமா சேர்த்து சாப்பிடலாம் .அடுத்து இனிப்புச் சட்னி எப்படி பண்றதுனு தெரிஞ்சிக்கலாம்.

மேதி டேப்ளா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்

 வெந்தயக்கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தது மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்  அரை ஸ்பூன்  கோதுமை மாவு 250 கிராம் கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன் எல்லாவற்றையும் லேசாக சூடாக்கவும் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் அதிலும் அரைக் கப் தயிர் நாம் அறிந்து வைத்திருக்கும் வெந்தியக்கீரை தேவையான அளவு சீனி 2 ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும் 15 நிமிடம் கழித்து சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு  அதன் மேல் நெய் தடவி பரிமாறலாம் சைடிஷ் வந்து நிறைய நமது பிளாக்கில் நிறைய போஸ்ட் போட்டிருக்கேன்.பன்னீர் பட்டர் மசாலா. கோபி மசாலா.  முட்டைகோஸ் மசாலா.நிறைய.... போட்டு இருக்கேன் நிறைய நிறைய சொல்லிட்டே போகலாம்.  எது உங்களுக்கு பிடிக்குமோ  நீங்க டைப் பண்ணினால்வரும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க பண்ணிக்கலாம் இப்போ மேதி டேபிளா ரெடி. 

தக்காளி தால்

 மைசூர் தால் ஒரு கப். குக்கர்ல நல்லா மலர  வேக வைக்கவும் .வாணலியில் எண்ணைய் விட்டு.காய்ந்ததும்  கடுகு. சீரகம் .கறிவேப்பிலை. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 3  போடுங்க மிளகாய்த்தூள்1  டேபிள்ஸ்பூன். தக்காளி 5 கொஞ்சம் பெரிய துண்டுகளாக கட் செய்து  வதக்கி பருப்புடன் சேருங்க. இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு. அரை டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வையுங்க. சூப்பரான  தக்காளி தால் ரெடி .தோசை. இட்லி. சப்பாத்தி. பூரி எல்லாத்துக்குமே சூப்பரான காம்பினேஷன் இந்த  தக்காளிதால் .

பாரம்பரிய மண் பானை சமையல் இருந்து opos ஆரோக்கியமான எப்படி?

பாரம்பரிய மண் பானை சமையலில் இருந்து Opos எப்படி ஆரோக்கியமானது? இதுபோல நிறைய பேர் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ரொம்ப ஈசியா சொல்லனும்னா .நம்ம முன்னாடி எல்லாம்  ஒரு பெரிய குக்கரில் .உள்ளே வச்சு எடுக்க .4 அடிக்கு ஒரு கேரியர் மாதிரி பாத்திரம் அதையும் சேர்த்து தான் கொடுப்பாங்க. இப்ப மண்பாண்டங்களில் செய்யக்கூடிய குக்கர் கூட கிடைக்கிறது  அதில் எப்படி சமையல் செய்யலாம்  தெரியுமா? நம்மளும் தெரிஞ்சுக்கலாம் வாங்க . இப்ப சாம்பார் காய்கறிகளை ரெடி செய்து முதல் அடுக்கில் வைத்துவிட்டு ஒரு ஸ்பூன் சாம்பார்த்தூள்  வெங்காயம். பச்சை மிளகாய். துவரம் பருப்பு .உப்பு .புளித் தண்ணீர். ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு .ஒரு அடுக்கு ரெடி. இரண்டாவது அடுக்கில் பொரியல். உப்பு .காரம் சேர்த்து .அரை டம்ளர் தண்ணீர் விடவும் இரண்டாவது அடுக்கு ரெடி .மூன்றாவது அடிக்கு கூட்டு செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி அதில் உப்பு. காரப்பொடி .பருப்பு தேங்காய் பேஸ்ட் .சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்றாவது அடிக்கு ரெடி. நாலாவதுஅடுக்கில்  தேவையான காய்கறிகள் உருளைக்கிழங்கு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் .அதுல கொஞ்சம் காரம். உப்பு. மிளகாய் தூள் .ஒ

டபுள் பீன்ஸ் மசாலா

 டபுள் பீன்ஸ் 1கப் பட்டாணி 1 கப் உப்பு போட்டு வேக வையுங்கள். குக்கரை அடுப்பில் வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணைய் விடுங்க.  சீரகம். கருவேப்பிலை. கடுகு .2   வெங்காயம். தக்காளி-2 நைஸாக அரிந்து போடுங்க . வேகவைத்து இருக்கக்கூடிய டபுள் பீன்ஸ் .பட்டாணி இரண்டையும் அதில் போடுங்க. மிக்ஸி ஜாரில் இஞ்சி. பூண்டு.  மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். முந்திரிபருப்பு 10 நைஸாக அரைத்து அதில் சேர்த்திடுங்க. பிறகு கொஞ்சம் உப்பு .தண்ணீர் சேர்த்து .மிதமான தீயில் நல்லா சுருள வதக்குங்கள்  எண்ணைய் பிரிந்து வரும்போது இறக்குங்க.டபுள் பீன்ஸ் மசாலா ரெடி நாண். .சப்பாத்தி. ஃப்ரைட் ரைஸ் .பூரி. எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம்

சமையல் எண்ணைய்

 நிறைய பேர் கேட்கிற கேள்வி என்னன்னா?சமையலுக்கு ரீஃபைண்ட் ஆயில் யூஸ் பண்ணலாமா கேக்குறாங்க? செக்கு எண்ணெய் வாங்கி  அதை நம்ம பயன்படுத்துவதுதான் நல்லது சொல்லுவேன். அது தரமானதாக இருக்கும் . சிலருக்கு அது பிடிக்காது. அதனால ஒரே மாதிரியாக எண்ணைய் வாங்காமல்  வேற வேற பிராண்டட் பார்த்து வாங்கி உபயோகப்படுத்துங்கள்.
 கோதுமை ரவையை .ஒரு கப் எடுத்து லேசாக வறுத்து கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைக்கவும். (ரொம்ப நாளாக  சொல்லணும்னு தோணுச்சு. இப்ப நான் அதிகம் பயன்படுத்துவது மண் பாத்திரங்கள்தான்.  குக்கர்.இட்லிபாணை. பிரஷர் பன். டம்ளர் நிறைய பாத்திரங்கள் கிடைக்கிறது. மைக்ரோ ஓவனில் வைத்து சமைக்கிறதுக்கு வசதியா இருக்கு. சுவையும் மாறாமல் இருக்கும். சரி நாம்ம இப்ப  சமையலுக்கு வருவோம்.) குக்கரை அடுப்பில் வையுங்கள் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு. கடலைப்பருப்பு. இஞ்சி. காய்ந்த மிளகாய்  10 . வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.  பிறகு கேரட் .உருளைக்கிழங்கு. பட்டாணி சேர்த்து வதக்கி. பிறகு கோதுமை ரவையை அதில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். ஒருகப் ரவைக்கு இரண்டரை கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து.குக்கர் மூடியை எடுத்து  மூடவும். 3 விசில் வைத்து இறக்கவும். பத்து நிமிடம் கழித்து. மூடியைத் திறந்து விட்டு அதில் .கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி விட்டு இருக்குங்க. கோதுமை ரவை உப்புமா ரெடி. தேங்காய் சட்னி .தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்.

ரவா கஞ்சி

 ரவா 1 கப்.வாணலியில் லேசாக வருக்கவும். குக்கர்ல கொஞ்சம் எண்ணைய் போடுங்க. அதில் கடுகு .காஞ்ச மிளகாய். இஞ்சி. கடலைப்பருப்பு போடுங்க. 4 டம்ளர் தண்ணி வையுங்க. கொஞ்சம் தண்ணீர் கொதி வந்ததும்.  ரவாவை போட்டு கைவிடாமல் கிண்டவும்.  4 முந்திரி  பருப்பை நைசா அரைத்து கஞ்சியில் கலந்து விடுங்கள். லேசா ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கி வையுங்க.சூப்பரான ரவா கஞ்சி ரெடி. நமக்கு காய்ச்சல் அடிக்கும் போது .வாய்க்கு எது சாப்பிட்டாலும் நல்லா இருக்காது அந்த சமயத்துல நல்லா சாப்பிட சொல்லி சொன்னா பிடிக்காது. அந்த நேரத்துல இந்த ரவா கஞ்சி  ஈசியா சீக்கிரமாக வச்சு சாப்பிடலாம்.  கொஞ்சம் காரமாஇருக்கும். இந்தக் கஞ்சி குடிக்கும் போது உடம்பு கொஞ்சம் ஹெல்தியாய் இருக்கும்.

கில்லு அடை

 புழுங்கல் அரிசி2கப்.பச்சரிசி1கப். இரண்டையும் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் .அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து  அடை போல கனமாக  தோசைகளாக வார்க்கவும் .சிவக்க விடாமல் வெண்மையாக  சிம்மில் வைத்து ஊத்த வேண்டும். ஆறியவடன் அந்த தோசையை சின்ன சின்னதாக கில்லி ஒரு டப்பாவில் வைக்கவும். பிறகு 2 கப் துவரம்பருப்பு குக்கரில் அரை பதத்திற்கு வேக வைக்கவும். ஒரு வாணலியில் சீரகம் 2 ஸ்பூன் எண்ணெய் விடாமல் வறுத்து. மிக்ஸியில் ஜாரில் ஒன்றிரண்டாக அரைக்கவும். 2 கப் தேங்காய் நைசாக துருவி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நாம் வேக வைத்த துவரம்பருப்பை.  ஜாரில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு. கடுகு .சீரகம் .காய்ந்த மிளகாய் 10.கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும் பின் கில்லி வைத்த அடைபை சேர்த்து நன்றாக கிளறவும். அதில் துவரம் பருப்பு. தேங்காய் துருவல். சீரகப்பொடி அதில் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய் தேவையான அளவு சேர்த்து .எல்லா புறமும் நன்றாக கிளறி விட்டு மிருதுவாக வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.கில்லு அடை ரெடி. இரண்டு நா

கொஸ்து செய்யலாம் வாங்க

 மிளகாய் 6. கடலைப்பருப்பு 1 டீஸ்பூன். மல்லி 2 டீஸ்பூன். வறுத்து மிக்ஸியில் நைஸாக பொடி பண்ணி வச்சிக்கோங்க. வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு. உளுத்தம்பருப்பு. காய்ந்த மிளகாய் சேர்த்து. தக்காளி-2 கத்தரிக்காய் 3 நைசாக  அதில் நறுக்கி சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும் அந்த கத்தரிக்காயை நைசாக மசித்து விடவும். புளித்தண்ணீர் ஒரு கப் அதில் சேருங்க . பொடி செய்து வைத்திருக்கும்  பவுடர். கொஞ்சம் உப்பு சேர்க்கவும் 15 நிமிடம் கொதிக்க விடுங்க. க கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.கொஸ்து ரெடி. இட்லி .தோசை. உப்புமா. பொங்கல் இது எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.

காலிஃப்ளவர் மசாலா

 காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க  அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன்  எண்ணைய் விடுங்க காய்ததும்  பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து.  வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை  மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து.  உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து  சாப்பிடலாம் .

கோதுமை மாவில் கொத்து பரோட்டா செய்யலாம் வாங்க

 கோதுமை மாவு தேவையான அளவு. கோதுமை மாவை சப்பாத்திகளாக செய்து வையுங்க.பிறகு பின்ஸ்.கேரட். முட்டைகோஸ். குடைமிளகாய். வெங்காயம் இவை அனைத்தையும்.  பொடியாக நறுக்கவும்.     வாணலியை அடுப்பில் வைத்து. அதில் பட்டை. சோம்பு .கரம் மசாலா. பிளைன் மிளகாய்த்தூள். தேவையான அளவு இவை அனைத்தையும் வதக்கிக் கொள்ளவும். பின்   வெங்காயம்.  மிளகாய்.பிறகு எல்லா காய்கறிகளையும்  போட்டு  வதக்கி. அதில்  டொமேட்டோ சாஸ் இரண்டு ஸ்பூன். சில்லி சாஸ் ஒரு ஸ்பூன். உப்பு இவை அனைத்தையும் வதக்கவும். நாம் செய்து வைத்திருக்கும் சப்பாத்திகளை  நறுக்கி . காய்கறி கலவையுடன் சேர்த்து கலந்து விடவும் .அடுப்பை நிறுத்திவிட்டு.இரண்டு தோசை திருப்பி வைத்து 20 நிமிடம்  கொத்த வேண்டும்.  பிறகு அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும். கொத்து பரோட்டா ரெடி. தயிர்  பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சில்லி பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

 மைதா மாவு ஒரு கப். நாலு ஸ்பூன் ரவா பவுடர். அரை டீஸ்பூன் ஈஸ்ட் 100 கிராம் தண்ணீரில்  ஊற வையுங்க. கரைந்ததும். அந்த ஈஸ்ட் எடுத்து மைதா மாவுடன் சேர்த்து. உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து .மைதா மாவை பரோட்டா போடும் பதத்திற்கு பிசைந்து.  5 நிமிஷம் ஊற வையுங்க. பிறகு ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக மாவை எடுத்து பரோட்டா செய்து வையுங்க .லேயர் லேயராக வரலைன்னா நீங்க கவலைப்பட வேண்டாம். ஓரளவுக்கு சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை .அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் விடுங்க நம்ம செய்து வைத்திருக்க பரோட்டாவை. அந்த எண்ணெய் காய்ந்ததும் அதில் பரோட்டாவை போட்டு  அடிக்கி வச்சிருங்க. ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க அதுல சோம்பு பட்டை 1 குடை மிளகாயை கீரி போடுங்க.மூன்று பெரிய வெங்காயத்தை நைசாக நறுக்கிப் போடுங்கள் 2 ஸ்பூன் சில்லி சாஸ் .2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ். அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள். கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் .சிறிதளவு உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. பிறகு பரோட்டாவை எடுத்து கையால் உடைச்சு மசாலாவுடன் கலந்து 10 நிமிடம் மூடி வையுங்கள்.பத்து நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கமகம .சில்லி பரோட்டா ரெடி.

ரசகுல்லா

ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.

அவல் பாயாசம்

அவல் ஒரு கப் எடுத்து லேசாக வறுக்கவும். ஒன்னு ரெண்டா கையாலேயே உடைத்து விட்டுங்க.குக்கர்ல அவல் போட்டு. ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வையுங்கள். பிறகு அதில் 2 கப் வெல்லம் சேருங்கள். ஒரு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து அதில் நாலு ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும். முந்திரிப்பருப்பு. திராட்சை வறுத்து அதில் போடுங்க.ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்.ஒரு துளி உப்பு.அரை டம்ளர் பால்சேர்க்கவும்.இவை அனைத்தையும் குக்கரில் வேக வைத்திருக்கும் அவல் பயத்துல மிக்ஸ் பண்ணுங்க.கைவிடாமல் கிளறுங்கள் கொஞ்சம் கெட்டியானதும்.ஒரு டம்ளர் எடுத்து பரிமாறவும்.அவல் பாயசம் ரெடி

வரகரிசி உப்புமா

குக்கரை அடுப்பில் வைங்க 5 ஸ்பூன் எண்ணைய் விடுங்க சூடானதும்.கடுகு அரை டீஸ்பூன். கடலைப்பருப்பு அரை டீஸ்பூன். பச்சை மிளகாய் 5 கீறிப் போட்டு ங்கு 5 வெங்காயம். பீன்ஸ்.கேரட். உருளைக்கிழங்கு. உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் ஒரு கப் நைஸாக அரிந்து அதில் சேர்த்து வதக்கவும். பிறகு வரகரிசி சேர்த்து வதக்குங்கள்.1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் விட்டு.தேவையானஅளவு உப்பு. கருவேப்பிலை சேர்த்து. குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும். அடுப்பை அனைத்துவிடடு. பிறகு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து நன்றாக கிளறி.ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும். வரகரிசி உப்புமா ரெடி. தேங்காய்சட்னி.சாம்பார் .தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

ஆரஞ்சு ரைஸ்

பாஸ்மதி ரைஸ் 1 கப் தண்ணீர் விட்டு அலசி. தண்ணீரை வடித்துவிட்டு 10 நிமிடம் வைக்கவும் குக்கரை அடுப்பில் வைத்து. 4 ஸ்பூன் நெய் சேர்த்து .காய்ந்ததும்.அதில் பட்டை. கிராம்பு பிரிஞ்சி இலை.ஏலக்காய் இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து விட்டு.பாஸ்மதி ரைஸ் அதில் சேர்த்து.லேசாக வறுத்து தேவையான அளவு உப்பு‌ 1 கப் தண்ணீர் விட்டுபாதி அளவு வெந்ததும்.அதில் ஆரஞ்ச் பழ ஜூஸ் எடுத்து ஒரு கப்.3 மூன்று ஸ்பூன் சீனி சேர்த்து.மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.வெந்தது அடுப்பை அனைத்து விட்டு. நெய் இரண்டு ஸ்பூன் சேர்த்துநன்றாக கிளறி விட்டு.ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும்.ஆரஞ்சு ரைஸ் ரெடி

Kalaireal.xyz

  Kalaireal.xyz என்னுடைய  இந்த பிளாக் இந்தியன் சமையல் அதாவது இந்திய மக்களின் அனைத்துவிதமான (சைவசமையல்)உணவு பழக்கங்களும் சமைப்பது எப்படி என்று நேரடியாக சொல்வது போல் எழிதி  போஸ்ட் போடுகிறேன்.உங்களுக்கு தேவையான ஹெஸ்தியானசிறுதானிய ரெசிப்பிகள்.ஸ்வீட்.காரம் உங்களுக்கு எந்த மாதிரியான சமையல் தேவையோ அவற்றை உடனே  போஸ்ட் போடுவேன்.எல்லோரும் என்னுடைய பிளாக் வந்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.அதிக பயனும் கிடைக்கும். WWW.kalaireal.xyz.,

தால் மக்கானி

 உளுந்து நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய உளுந்துடன்.  குக்கரில் 5 விசில் வைத்து நன்றாக குழைய வேக வைக்கவும் .வாணலியை அடுப்பில் வைத்து .இரண்டு ஸ்பூன் வெண்ணெய் உருகியதும் வெங்காயம் நைசாக நறுக்கிய வெங்காயம் 3 .தக்காளி 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் இவை அனைத்தையும். பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் . உளுந்து குழைய வேக வைத்த உளுந்தை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை. சீரகம் தலா அரை டீஸ்பூன். தாளித்து கொதிக்கும் அந்த பருப்பில் சேருங்கள். மீதமிருக்கும் வெண்ணைய் அதில் சேர்க்கவும் ருசி நன்றாக இருக்கும். முடிந்தால் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம். தால் மக்கானி ரெடி. சப்பாத்தி பூரியுடன் சாப்பிடலாம்.

சுரைக்காய் மசாலா

 சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து  வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து  நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து  வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு பால் அரைக்கப். .கருவேப்பிலை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்.சுரைக்காய் மசாலா ரெடி.

பன்னீர் பிரட் டோஸ்ட்

வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய்  விடுங்க. மிளகாய்த்தூள்  ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட்   டோஸ்ட்  செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி.

டிபன் சுண்டல்

 ஒரு கப் பச்சரிசி. அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் லேசாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை அடுப்பில் வைத்து.. இரண்டு கரண்டி  எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் கடுகு. உளுத்தம்பருப்பு. பச்சை மிளகாய்.5. வெங்காயம் 2.கடலைப்பருப்பு. இஞ்சி. கருவேப்பிலை. தேவையான அளவு உப்பு.( விருப்பப்பட்டால் காய்கறிகள் கேரட். உருளைக்கிழங்கு .பட்டாணி. உங்கள் விருப்பம் போல சேர்த்துக்கொள்ளலாம்.) சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிக்ஸியில் நாம் வறுத்து வைத்திருந்த பச்சரிசியை இரண்டு ஒன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து. குக்கரில்  வதக்கி வைத்திருக்கும் கலவையுடன். ஒரு கப் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் வைத்து. 3 விசில் வைத்து இறக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லித் தழை தூவி  ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  சுண்டல் ரெடி. விருப்பப்பட்டால் தேங்காய் ஒரு மூடி துருவி. பரிமாறும்போது அதன் மேல் போட்டு. ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இல்லை என்றால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஊறுகாய். இவற்றுடன் சா

தயிர் டிக்கா

 தயிர் ஒரு கப் வெள்ளைத்துணியில்  நீர்வடிய முடிந்து வைக்கவும். பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன். காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலா அரை டீஸ்பூன். கான்பிளவர் ஒரு ஸ்பூன் . சர்க்கரை ஒரு டீஸ்பூன். இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கு கால் கிலோ. தோல் உரித்து சுத்தம் செய்து மசித்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் 2. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன். உப்பு.தண்ணீர் சிறிதளவு சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து.  சிறிய உருண்டைகளாக தட்டி. பின்னர் அடுப்பில் தவாவை வைத்து அதில் டிக்கா வைத்து. சுற்றிலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் .ஒரு தட்டில் டிக்கா வைத்து அதன்மேல். தயிரில் இரண்டு ஸ்பூன் குங்குமப்பூ கலந்து. அதன்மேல் வைத்து ஓமம் சிறிது அதன் மேல் தூவி சாப்பிடலாம். தயிர் டிக்கா ரெடி.

தேங்காய் இல்லாத சட்னி

 பச்சை மிளகாய் 8. பெரியவெங்காயம் 4. கடலைபருப்பு 4 டேபிள் ஸ்பூன். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும் .புளி  சிறிதளவு. உப்பு தேவைக்கு ஏற்ப இவை அனைத்தையும்  நைசாக அரைத்து. ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .பிறகு கடுகு கருவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். தேங்காய் இல்லாத சட்னி ரெடி.

பச்சைமிளகாய் துவையல்

பச்சை மிளகாய் 10. உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன். எண்ணெயில் வதக்கி .உப்பு.பெருங்காயத்தூள்.சிறிது.1 பிடி மல்லி இலை.சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். பச்சைமிளகாய் துவையல் ரெடி.

எள்ளு துவையல்

 எள்ளு 4 ஸ்பூன் வாணலியில் எண்ணெய் விடாமல்  வறுத்து  காய்ந்த மிளகாய் 5  உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன் சேர்த்து மிக்ஸி ஜாரில் சிறிதளவு புளி உப்பு  தேவையான தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். . எள்ளு துவையல் ரெடி. (இதில் தண்ணீர் விடாமல் அரைத்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். எள்ளு சாதம் செய்யலாம் )

ரவா மிக்ஸ்

 ரவா 1கிலோ பச்சரிசி 500 கிராம். மைதா 500  கிராம். மிளகு  25 கிராம். சீரகம் 25 கிராம் இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து  நைசாக அரைத்துக் கொள்ளவும். தேவையானபோது எடுத்து அரை மணி நேரத்திற்கு முன்பு சற்று நேரம்.  தண்ணீர் விட்டு ஊற வைத்து. வெங்காயம் .பச்சை மிளகாய். இஞ்சி .உப்பு சேர்த்து ரவா தோசை செய்யலாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

அடை மிக்ஸ்

 கடலைப்பருப்பு  500 கிராம். துவரம் பருப்பு 250 கிராம். உளுத்தம் பருப்பு 150 கிராம். மிளகாய் 100 கிராம் இவை அனைத்தையும் நைசாக அரைத்து . டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். அடை ஊற்றுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு. தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வெங்காயம். பச்சை மிளகாய். இஞ்சி நைஸாக அரிந்து போடவும். பெருங்காயத்தூள்.   கருவேப்பிலை. உப்பு சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும். தோசைக்கல்லைகாயவைத்து .கல் காய்ந்ததும் அதில் உங்கள் விருப்பம் போல் நைசாக அடை ஊற்றவும். இரண்டு புறமும் வெந்ததும்  ஒரு பிளேட்டில் வைத்து தேங்காய் சட்னி. அவியல். வெண்ணெய் வெல்லம் தொட்டு சாப்பிடும்போது நன்றாக இருக்கும் .அடை ரெடி .அடை மிக்ஸ் செய்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பன்னீர் மசால் தோசை

வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம். பச்சைமிளகாயை போடுங்க நன்றாக வதங்கியதும் கொஞ்சம் உப்பு. மிளகாய்த்தூள். மல்லித்தூள். சீரகத்தூள் கரம் மசாலா தல அரை ஸ்பூன். 100 கிராம் அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் மூன்று ஸ்பூன் நெய் விடவும். ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.தோசை மாவு ஒரு கப்.தோசைக்கல்லை அடுப்பில் வைத்து. காய்ந்ததும் நைஸாக மெல்லியதாக தோசை ஊற்றி அதில் இந்த கிரேவியை மேல் வைத்து. ஒரு பக்கமாக மூடி எடுக்கவும் .பன்னீர் மசால் தோசை ரெடி.(இதேபோல்தான் பன்னீருக்கு பதில் கேரட் சேர்த்தால் 🥕 கேரட்தோசை ரெடி) தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

மஸ்ரூம் மசாலா

மஸ்ரூம் ஒரு பாக்கெட் சுத்தம் பண்ணி எடுத்து வைங்க. பிரஷர் பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஒரு குழிகரண்டி விட்டு பட்டை. கிராம்பு. .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். சேர்த்து நல்லா வதக்குங்கள். வெங்காயம் 2.தக்காளி 2 நைசாக பொடி கட் செய்து. அதில் சேர்த்து நல்லா வதக்குங்க.ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள். அரை டீஸ்பூன் மல்லித்தூள்.கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன். மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்.உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. இப்ப சுத்தம் பண்ணி வச்சிருக்கும் மஸ்ரூம் சேருங்க கசகசா அரை டீஸ்பூன் .தேங்காய் 1ஸ்பூன் மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து கிரேவியில் விடவும் எண்ணெய் பிரிந்து வரும்போது இருக்குங்க. மஸ்ரூம் மசாலா ரெடி

மட்டர் பன்னீர் மசாலா

பட்டாணி ஒரு கப் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு. காய்ந்ததும் பட்டை. சீரகம். ஏலக்காய் .கிராம்பு .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து .அதில் இரண்டு தக்காளி. 2 வெங்காயத்தை நைசாக பொடி செய்து சேர்க்கவும். பிறகு அதில் 1. ஸ்பூன் மிளகாய்தூள். 1 ஸ்பூன் மல்லித் தூள். அரை ஸ்பூன் சீரகம்.கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்.உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி.100 கிராம் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 10 முந்திரிப்பருப்பை நைசாக அரைத்து.குக்கரில் உள்ள கிரேவியில் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.எண்ணெய் பிரிந்து வெளியில் வரும்போது இறக்கவும்மட்டர் பன்னீர் மசாலா ரெடி. பாத்திரத்தில் மாற்றி இரண்டு ஸ்பூன் நெய் விடவும்.

டபுல் பீஸ் மசாலா

இஞ்சி 1துண்டு பூண்டு 4.பல் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தனியா தூள்1. ஸ்பூன் முந்திரிபருப்பு 10 மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் சீரகம். கறிவேப்பிலை  .சோம்புத்தூள் அரை ஸ்பூன். கரம் மசாலா கால் டீஸ்பூன் தாளித்து அதில் வெங்காயம் 2. தக்காளி 2 சின்னதாக நறுக்கி அதில் சேர்க்கவும். பிறகு டபுள் பீஸ் தோலுரித்து 100.கிராம் . பட்டாணி ஒரு கப் .தண்ணீர் அரை டம்ளர். உப்பு .அரைத்த விழுது களையும் அதில் சேர்க்கவும் .பிறகு குக்கரை மூடி 2 விசில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து பிறகு குக்கரை திறந்து. இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் .டபுள் பீஸ் மசாலா ரெடி.

தால் சப்பாத்தி

கடலைப்பருப்பு1 கப் குக்கரில் தண்ணீர் விட்டு. ஒரு விசில் வைக்கவும் .பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் 300 கிராம் சர்க்கரை .ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .1 கப் மைதா 1. கப் கோதுமை மாவு .உப்பு சேர்த்து  மாவுவை பிசைந்து வைக்கவும் . 15.நிமிடம் ஊறிய பிறகு சப்பாத்திகளாக செய்து.. நடுவில் பருப்பு சர்க்கரை சேர்த்து அரைத்து அந்த கலவையை இரண்டு ஸ்பூன் வைத்து. அதன் மேல் இன்னொரு சப்பாத்திகயைஅதன் மேல் வைத்து மூடி இரண்டு புறமும் நன்றாக தேய்த்து.  தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். சப்பாத்திகளை அதன்மேல்மூடி  இரண்டு பக்கமும் சிவக்க வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு எடுக்கவும். தால் சப்பாத்தி ரெடி

வாழைப்பூ தோசை

 தோசை மாவு 1.கப் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு ஒரு ஸ்பூன்.சீரகம் ஒரு ஸ்பூன் .வாழைப்பூ சுத்தம் செய்து உங்கள் விருப்பத்திற்கேற்ப வாழைப்பூ அதில் சேர்த்துக்கொள்ளவும் . நைசாக அரைத்து தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மெல்லியதாக தோசை ஊற்றி. ஒரு மூடி வைத்து மூடவும் .பிறகு அதில் ஒரு ஸ்பூன் நெய் தடவி .தோசையை மடித்து .ஒரு பிளேட்டில் வச்சுக்கவும். வாழைப்பூ தோசை ரெடி .தேங்காய் சட்னி .தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம்.

திராட்சை கிரேவி

 கறுப்பு திராட்சை அரைக்கிலோ வாணலியை அடுப்பில் வையுங்கள் அதில் 4 ஸ்பூன் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து முந்திரிப் பருப்பு 25 கிராம் சின்னதா கட் செய்து அதையும் அதில் சேர்த்து பிறகு திராட்சையை நறுக்கி சேர்க்கவும் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும் பிறகு அதில் சர்க்கரை 250 கிராம் சேர்க்கவும் சர்க்கரை கரையும் வரை வதக்கி நெய் பிரியும் போது இறக்கவும் திராட்சை கிரேவி ரெடி ஃப்ரெஞ்ச் ப்ரைஸ். பர்கர்.சமோசா .சப்பாத்தி. தயிர்சாதம் .இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்  இருக்கும்

பாசிப்பருப்பு பன்னீர் மசாலா

 பாசிப்பருப்பு 1கப் . வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் .பிரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். கடுகு .சீரகம். கறிவேப்பிலை.  பச்சை மிளகாய் 3. மிளகாய்த்தூள்தூள் ஒரு ஸ்பூன் .காரம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சேர்த்துக் கொள்ளவும் .தக்காளி 4.சேர்த்து வதக்கவும் .அதனுடன் வெந்த பாசிப்பருப்பு .உப்பு தேவையான அளவு. பன்னீர் 200 கிராம் சின்ன சின்னதா கட் செய்து சேர்த்துக் கொள்ளவும் . பிறகு 5 நிமிடம் நன்றாக கொதிக்கவிட்டு  எண்ணெய் பிரிந்து வாசனை வரும்போது  மல்லித் தழை தூவி இறக்கவும் இட்லி தோசை சப்பாத்திக்கு நன்றாக இருக்கும் பயத்தம்பருப்பு பனீர் மசாலா ரெடி. 

நெல்லிக்காய் காரக்குழம்பு

  நெல்லிக்காய் 6 குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு  வேக வைக்கவும் .தண்ணீரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். மிக்ஸி ஜாரில்  நெல்லிக்காய் . பச்சை மிளகாய் 8 உங்களுக்கு தேவையானளவு காரம் சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் துருவி 2 ஸ்பூன் சேர்த்து. நைசாகஅரைக்கவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. 2 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்.  அதில் பூண்டு 20. பல் தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு. கருவேப்பிலை. பூண்டு அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு  நெல்லிக்காய் கிரேவி . சிறிது உப்பு .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து. நெல்லிக்காய் தண்ணீரை சேர்த்து. கிளறிவிட்டு .எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நெல்லிக்காய் காரக்குழம்பு ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

பன்னீர் சப்பாத்தி

 கோதுமை மாவு 2 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும் 15 நிமிடம் ஊறவைக்கவும் சப்பாத்திகளாக இட்டு அதில் ஆம்சூர் பவுடர் அரை ஸ்பூன் துருவிய பன்னீர் 2 ஸ்பூன். கரம் மசாலா பவுடர் அரை டீஸ்பூன் அதன் மேல் தூவி மற்றுமொரு சப்பாத்தியை மூடி இரண்டு பக்கமும் நன்றாக 

பன்னீர் சாமை ஊத்தாப்பம்

 இட்லி அரிசி 3 கப் .சாமை ஒரு கப். உளுந்து ஒரு கப். சேர்த்து 5 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மிளகு சீரகம் வருது பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் தேவையான  பொடியாக  நறுக்கவும் .பன்னீரை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தோசை கல்லில் மாவை ஊற்றி அதன்மேல் நறுக்கிய வெங்காயம்.பன்னீர். மிளகு சீரகம் பொடி தூவி . அதன் மேல் எண்ணெய் விட்டு. இரண்டு பக்கமும்  வேகவத்து எடுக்கவும். பன்னீர் சாமை ஊத்தப்பம் ரெடி. இட்லி மிளகாய் பொடி .+காரச் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

ராஜ்மா குருமா

ஒரு கப் ராஜ்மா 7 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பிரஷர் பன் அடுப்பில் வைக்கவும் அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் சீரகம். கால் டீஸ்பூன் வெந்தயம்  பட்டை .சோம்பு சேர்த்து .நன்கு வதக்கவும். பிறகு 4 தக்காளிகளை நறுக்கி நன்றாக  கரையும் வரை வதக்கவும் .அதனுடன் மிக்ஸி ஜாரில் 2 வெங்காயம். இஞ்சி. பூண்டு நைசாக அரைக்கவும் .அதையும் தக்காளியுடன் சேர்த்து  பச்சை வாசனை போக நன்கு வதக்கவும் .பிறகு அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்.  சீரகத்தூள் அரை டீஸ்பூன்.மல்லித் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் .மஞ்சள்தூள் அரை டீஸ்பூன். உப்பு தேவையானளவு சேர்த்து .நன்றாக வதக்கி விட்டு. பிறகு வேக வைத்து ராஜ்மாவைஅதனுடன் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு .15 நிமிடம் கொதிக்க வைத்து. எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும் . 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும் . ராஜ்மா குருமா  ரெடி.

முந்திரி மசாலா

முந்திரி பருப்பு 100 கிராம். இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். பிரஷர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் . பட்டை. கிராம்பு .இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 2  வெங்காயத்தை நைஸாக அரிந்து வதக்கவும். 2 தக்காளி பொடியாக நறுக்கி வதக்கவும். தேங்காய் துருவி ஒரு கப் தேங்காய் பால் எடுத்து தனியாக வைக்கவும். மிக்ஸி ஜாரில் 8முந்திரி பருப்பு. கசகசா அரை டீஸ்பூன் சேர்த்து நைசாக அரைக்கவும் . தக்காளி நன்றாக வதங்கியதும். அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள். மல்லித்தூள் . தேவையான அளவு உப்பு சேர்த்து. அரைத்து வைத்துள்ள முந்திரி மசாலா. தேங்காய் பால்   சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து. கெட்டியானவுடன் இறக்கவும். முந்திரி மசாலா ரெடி பரோட்டா பூரிக்கு  சாப்பிடலாம்

லட்டு (ரத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும்)

 நிலக்கடலை 100 கிராம். உலர்ந்த திராட்சை 100 கிராம். முந்திரி பருப்பு 100 கிராம். வெல்லம் 25 கிராம். (உங்களுக்கு தேவையான அளவு) பேரிச்சம் பழம் 100 கிராம். வெண்ணைய் 10 கிராம் இவை அனைத்தையும். மிக்ஸியில்  நைஸாக அரைத்து. பாத்திரத்தில் மாற்றி சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி ஒரு டப்பாவில் அடைத்து.   பிரிட்ஜில் வைக்கவும். தினமும் ஒரு உருண்டை எடுத்து சாப்பிட்டால் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் . லட்டு ரெடி.

தம் ஆலு

 உருளைக்கிழங்கு 500 கிராம் தோல் சீவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி. எண்ணெய் காயவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 5 காய்ந்த மிளகாய் .ஒரு டீஸ்பூன் மிளகு. ஒரு டீஸ்பூன் சீரகம். பட்டை. கிராம்பு.  வெறும் வாணலியில் வறுத்து. மிக்ஸியில் நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு. அதில் இஞ்சி. பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். வெங்காயம் கால் கிலோ அளவுக்கு பொடிதாக நறுக்கி வதக்கவும் .அதில் இரண்டு தக்காளி பழம் நறுக்கி  வதக்கவும். பிறகு 2 ஸ்பூன் தயிர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும் .நன்கு சுருண்டு வரும்போது.  உருளைகிழங்கை அதில் சேர்த்து( உப்பு காரம் அனைத்தும் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளவும்) 10 நிமிஷம்  அதை சிம்மில் வைத்து. எண்ணைய் பிரிந்த சுருண்டு வரும்போது இறக்கவும். தம் ஆலு ரெடி.

பட்டர் பரோட்டா

மைதா மாவு 2 கப். வெண்ணெய் 50 கிராம். எண்ணைய். சிறிதளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதை இழுத்துப் பிசைந்து  எண்ணைய் தொட்டு சப்பாத்தி போல் இடவும். நீளவாக்கில் பீஸ் பீஸாக போட்டு.அதை ஒரு கொத்து போல பிடித்து சுத்தி. பிறகு அதை  பரோட்டா சுற்றுவதுபோல்  இறுக்கமாக சுருட்டி வைக்கவும் அதன் மேல் எண்ணெய் தடவி ஐந்து நிமிடம் வைக்கவும். சிறிது நேரம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்து. தோசைக்கல்லில்  மிதமான தீயில் இருபுறமும் வேகவைத்து .பரோட்டாவை தட்டி எடுத்து வைக்கவும். பட்டர் பரோட்டா ரெடி.   பட்டர் பரோட்டாவுக்கு சால்னா எப்படி செய்வது அடுத்து பார்க்கலாம் .

குல்சா

ஒரு கப் மைதா மாவுடன். ஒரு ஸ்பூன் சர்க்கரை.  சமையல் சோடா. உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும். பிறகு நான்கு உருளைக்கிழங்கை வேக வைத்து. மசித்து தோலுரித்து  எடுத்துக் கொள்ளவும் .மிக்ஸி ஜாரில் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் .கொத்தமல்லி  கால் கப் .மாதுளை விதைகள் சிறிதளவு. இவை அனைத்தையும் மிக்ஸியில் ரவை பழக்கததிற்கு அரைக்கவும் .பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து .ஒரு சுற்று சுற்றி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .மசாலா ரெடி .பிறகு நாம் பிசைந்து வைத்துள்ள  மைதா மாவை சப்பாத்திகளாக இட்டு .அதில் இந்த மசாலாவை நடுவில் வைத்து மூடி. இரண்டு பக்கமும் தேய்து  சப்பாத்திகளாக இட்டு .தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளாக போட்டு எடுக்கவும் இரண்டு புறமும் சிவந்தவுடன் அதன் மேல் நெய் தடவி எடுத்து வைக்கவும் .குல்சா ரெடி.

கோதுமை மாவு ரொட்டி

 அரைக் கப் பயத்தம் பருப்பு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து. தண்ணீரை வடித்து அதனுடன் மிளகு. சீரகம். இஞ்சி. உப்பு .மஞ்சள் தூள் சேர்த்து .மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை. மாவு உப்பு கால் கப் ரவை சேர்த்து.சப்பாத்தி சுடுவது போல பிசைந்து வைக்கவும் .சிறிது நேரம் கழித்து அந்த சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி. சப்பாத்திகளை செய்யவும். அதன் மேல் நாம் செய்து வைத்திருந்த கலவையை அது மேல்  வைத்து மூடி இரண்டு பக்கமும் நன்றாக தேய்த்து .சப்பாத்தி செய்து. தோசைக்கல்லில் இரண்டு புறமும் சுட்டு எடுக்கவும் . கோதுமை மாவு ரொட்டி ரெடி.

இனிப்பு போலி

 மைதா மாவு 2 கப் .கேசரி பவுடர் சிறிது சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.  கடலைப்பருப்பு ஒரு கப். வெறும் வாணலியில் வறுத்து  ஊற வைங்கவும்.  பிறகு தண்ணீரை வடித்துவிட்டு வெல்லம் 2 கப். தேங்காய் துருவல் ஒரு கப். ஏலக்காய் சேர்த்து மிக்ஸியல் ரவை பதத்துக்கு அரைக்கவும். பிறகு வாணலியில் 2 குழிக்கரண்டி நெய் விட்டு .அரைத்த கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறி. நெய் பிரிந்து வரும் போது இறக்கவும். மைதா மாவை சப்பாத்தி போல் வட்டமாக தேய்த்து. நடுவில் பூரணத்தை வைத்து மூடி  வட்டமாகத் தேய்த்து. சப்பாத்தி போல் தோசைக்கல்லில் சுட்டு எடுக்க வேண்டும். அதன் மேல் நெய் தடவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இனிப்பு போளி ரெடி.

காரக்குழம்பு

 7 காய்ந்த மிளகாய். 2 ஸ்பூன்  மிளகு ஒரு ஸ்பூன். சீரகம் ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு நல்லா வறுத்து நைஸாக பொடி செய்து வச்சிருங்க. எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து .கரைத்து ஒரு கப் எடுங்க. வாணலியை அடுப்பில் போட்டு. நல்லெண்ணெய் 2 குழிக்கரண்டி விடுங்க. காய்ந்ததும் கடுகு. வெந்தயம். துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் அதில் சேர்த்து வதக்குங்க. கலர் மாறியதும் .பூண்டு 10 பல்  . சின்ன வெங்காயம் 10. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து நல்லா வதக்குங்க கலர் மாறியதும் .  அதில் தேவையான அளவு உப்பு சேருங்கள் நம்ம பொடி செய்து வச்சிருந்தபவுடர்  அதையும் சேர்த்து. நல்ல கிளறி விட்டு ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும்.குழம்பு எண்ணைய் பிரிஞ்சு வெளியில் வரும்போது இறக்குங்க.  கார குழம்பு ரெடி.  ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு இந்த குழம்பு வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்

மசாலா சப்பாத்தி

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு. எண்ணெய் காய்ந்ததும் .சோம்பு அரை டீஸ்பூன்.  வெங்காயம் 2 .தக்காளி 2 பொடியாக நறுக்கி. எண்ணெயில் வதக்கவும். ஒரு ஸ்பூன் மிளகாய் தூள். ஒரு ஸ்பூன் மல்லித் தூள். அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள். சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு  உப்பு சேர்த்து. வதக்கி வைத்திருக்கும் மசாலாவை அந்த மாவில் சேர்த்து  சப்பாத்தி மாவு பிசையவும். பிறகு 15 நிமிடம் கழித்து அதை சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சப்பாத்தி போட்டு எடுக்கவும்.  மசாலா சப்பாத்தி ரெடி. தேங்காய் சட்னி அல்லது குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய் இல்லாத குருமா +பீஸ் மசாலா

 வெங்காயம் 3 வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி ஆற வைக்க. கிராம்பு 3 .பட்டை ஒரு துண்டு. பொட்டுகடலை சிறிது (இல்லன்னா) முந்திரி பருப்பு 8.  மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். இது எல்லாத்தையும். ஆற வைத்த வெங்காயம்  சேர்த்து நைசாக அரைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தது.ம் சிறிது  சோம்பு .இஞ்சி பூண்டு பேஸ்ட்  போட்டு நல்லா வதக்கி. (பச்சை வாசனை போக) அப்புறம் ஒரு கப் பச்சை பட்டாணியை சேர்த்து நல்லா வதக்கவும். மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த கிரேவி    சேர்த்து. தேவையான அளவு உப்பு காரம் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து  குக்கரை மூடி மூன்று  விசில்  வைங்க. சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து. அதுக்கப்புறம் அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி .ஒரு பாத்திரத்தில் மாற்றி 1கரண்டி தயிர் (உங்களுக்கு விருப்பமான அளவு )அதுல சேருங்க. பீஸ் மசாலா ரெடி.

வாழைப்பூ தோசை

        1 ஸ்பூன் மிளகு .1 ஸ்பூன் சீரகம்.வாழைப்பூ தேவையாளவு மிக்ஸியில் நைசாக அரைத்து தோசைமாவில் கலக்கவும். தோசை  மெலிதாக ஊற்றி  ஒரு பக்கமாய் மூடி சிவந்ததும் அதன் மேல் 1 டீஸ்பூன் நெய் தடவி எடுக்கவும். வாழைப்பூத்தோசை ரெடி.தேங்காய் சட்னிபுடன் சாப்பிட நல்லாயிருக்கும்.

திரட்டிப்பால்

200 கிராம் பயத்தம் பருப்பை. அடுப்பைப் பற்றவைத்து லேசாக நிறம் மாறும் போது வரை வறுத்து.  அதனுடன் 100 கிராம் அரிசியை தனியாக வறுத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை மட்டும் குக்கரில் 2 விசில் வைக்கவும். பச்சரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் நைஸாக பச்சரிசியை அரைக்கவும். அதனுடன் வெந்த பயத்தம் பருப்பை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்து வைத்திருக்கும் இந்த கலவையை அதில்சேர்த்து. 500 கிராம் வெல்லம்( சுத்தம் செய்து) அதனுடன் சேர்க்கவும்.  நன்கு திரண்டு வரும் போது 200 கிராம் எண்ணெய் அதில் சேர்க்கவும். ஏலக்காய் 25கிராம் பவுடர் சேர்த்து. கைவிடாமல் கிளறி நெய் பிரிந்து வெளியில் வரும்போது இறக்கவும். திரட்டிப்பால் ரெடி .

எப்படி பீட்ரூட் பொரியல் செய்றது

பீட்ரூட் நைசாக நறுக்கிங்க  குக்கர் அடுப்பில் வைத்து எண்ணைய் 2 ஸ்பூன்  காய்ந்ததும் கடுகு. போடவும் .  தேங்காய் நாலு பல் மிளகாய்.1  சோம்பு சீரகம் தலா அரை டீஸ்பூன்  மிக்சியில் நல்லா  அரைத்து .அதுக்கப்புறம் குக்கரில் உள்ள பீட்ரூட்டன் கலந்து. கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு விசில்  வையுங்க பீட்ரூட் பொரியல் ரெடி.

முந்திரி பக்கோடா

 2கப் கடலை மாவு. 1 கப் அரிசி மாவு. 100 கிராம் முந்திரி பருப்பு. பச்சை மிளகாய் 3 (காரத்திற்கு தேவையான அளவு) இஞ்சி ஒரு துண்டு. உப்பு தேவையான அளவு. இஞ்சி. பச்சை மிளகாய் முந்திரி பருப்பு இவை அனைத்தையும்  பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு கடலை மாவு .உப்பு .அரிசி மாவுடன் சேர்த்து. பக்கோடா உதிர்த்து போடும் பதம் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். இந்த பக்கோடா கலவையை எண்ணெயில் போட்டு எடுக்கவும் . நன்கு சிவந்து வெந்ததும்  தட்டில் வைத்தால் முந்திரி பக்கோடா ரெடி.

மிளகு .சீரகம் பொங்கல்

  குக்கரை அடுப்பில் வைத்து. 50 கிராம் பயத்தம் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும் .1 டம்ளர்  பச்சரிசியை எடுத்து கழுவி சுத்தம் செய்து விட்டு குக்கரில் சேர்க்கவும்.1 டம்ளர் அரிசிக்கு 5 டமளர் தண்ணீர் சேர்த்து வறுத்த பாசிப் பருப்புடன் சேர்ந்து குக்கரில் 5 விசில் வைக்கவும் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு சீரகம் தலா ஒரு ஸ்பூன் வறுத்துப் பொடி செய்து போடலாம் இஞ்சி பச்சை மிளகாய் தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு குக்கரில் உள்ள சாதத்தையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து  பிறகு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி 50 கிராம் நெய்யில் முந்திரிப் பருப்பு வறுத்து பொங்கலில் சேர்க்கவும் நன்றாகக் கிளறி நெய் பிரிந்து வரும் பொழுது பொங்கலை இருக்கவும் பொங்கல் தயார் ரெடி

வெந்தய தோசை

 புழுங்கல் அரிசி 500கிராம்.  வெந்தயம் 50 கிராம். வெள்ளை உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன் இவை அனைத்தையும் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் .பிறகு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் .பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து மூடி வைக்கவும். மாவு புளிப்பு பதம் வந்ததும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும். தோசை மாவை கலந்து நன்றாக கலந்துவிட்டு தோசை வார்க்கவும்.வெந்தயதோசை ரெடி. தக்காளிச் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

பனீர் ஃப்ரை

 வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெங்காயம்  2. தக்காளி 3. இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி விட்டு. அரை டீஸ்பூன் மஞ்சள்தூள். ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் .ஒரு டீஸ்பூன் மல்லித்தூள். அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள். தேவையான அளவு உப்பு .சோம்புத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் .பிறகு பன்னீர் 200 கிராம் சின்ன சின்னதாக நறுக்கி அதனுடன் சேர்த்து  நன்றாக கலந்துவிட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக சுருண்டு வரும்போது. ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும். பன்னீர்  ஃப்ரை ரெடி. சப்பாத்தி .நாண்  இவைகளுடன சாப்பிட  நன்றாக இருக்கும்.

முட்டைக்கோஸ் மசாலா

  முட்டைக்கோஸ் 2 கப். வெங்காயம் 3 தக்காளி 3 வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெங்காயம். தக்காளியை பொன்னிறமாக வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் ஒரு கப் பொட்டுக்கடலை. பட்டைை.கிராம்பு.ஏலக்காய். பச்சை மிளகாய் ஒன்று சேர்த்து நைசாக அரைக்கவும்  குக்கரில் 3ஸ்பூன் எண்ணெய்(நெய்) சீரகம் அரை ஸ்பூன். நறுக்கிய முட்டைகோஸ் 2 கப் அதனுடன் சேர்க்கவும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் மல்லித்தூள் ஒரு ஸ்பூன். சீரகத்தூள் அரை ஸ்பூன். மஞ்சள் தூள். அரைத்து வைத்திருக்கும் மசாலா. தேவையான அளவு உப்பு சேர்த்து. உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைக்கவும். கோஸ்மசாலா ரெடி.

ரவா கேசரி

ரவா 1கப் லேசாக வறுத்துக்கொள்ளவும்.கடாயில் தண்ணீர் 3கப் தண்ணீர் கொதிவிட்டு ரவா சேர்த்து கைவிடாமல் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வேக வைக்கவும். அதில் 2 கப் சீனி.கேசரி பவுடர் சேர்த்து. கட்டி இல்லாமல் கரைத்துவிட வும்100.கிராம் நெய்யில் முந்திரி வறுத்து.போடவும் 10 கிராம் ஏலக்காய்பவுடர் போடவும் நன்றாக கிளறவும் நெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.கேசரி ரெடி.

சிம்பிள் ஆலு மசாலா

 உருளைக்கிழங்கு தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் 2 கப்  நைசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு 10 பல் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் ஒரு கப். வாணலியை அடுப்பில் வைத்து. நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம். சோம்பு தலா ஒரு ஸ்பூன் சேர்த்து. பூண்டு .வெங்காயம் நறுக்கிய உருளைக்கிழங்கு.( எண்ணெயில் வெந்து இருக்க வேண்டும் )சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகாய்தூள். ஒரு ஸ்பூன் மல்லி தூள். அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை ஸ்பூன் மஞ்சள் தூள். தேவையான அளவு உப்பு. தேங்காய் பால் சேர்த்து நன்றாக கிளறி பத்து நிமிடம் வேக வைத்து. பச்சை வாசனை போன பிறகு கெட்டியானதும் இறக்கவும். சிம்பிள் ஆலு மசாலா ரெடி.

கோபி மசாலா

 கொதிக்கும் வெந்நீரில் உப்பு சேர்த்து  .அடுப்பை அணைத்துவிட்டு. காலிஃப்ளவரை 10 நிமிடம் வெந்நீரில் போட்டு  காலிஃப்ளவரை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 3 தக்காளி .2 வெங்காயம் நன்கு வதக்கி ஒரு தட்டில் ஆறவைத்து. பின் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும். பட்டை . சோம்பு அரை ஸ்பூன். இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்.அரைத்த வெங்காயம் தக்காளி.ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள். ஒரு ஸ்பூன் மல்லித் தூள். அரை ஸ்பூன் கரம் மசாலா. அரை ஸ்பூன் மஞ்சள் தூள். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .பிறகு சுத்தம் செய்த காலிஃப்ளவர் அரை டம்ளர் தண்ணீர் அதனுடன் சேர்த்து.பச்சை வாசனை போன பிறகு. எண்ணெய் பிரிந்து மேலே  வரும்போது இறக்கவும். கோபி மசாலா ரெடி.

சன்னா மசாலா

 முதல் நாள் இரவே சன்னா 2கப் தண்ணீர் விட்டு  ஊற வைக்கவும் . காலையில் குக்கரில் இரண்டு விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு  வெங்காயம் 3. தக்காளி 4 நறுக்கி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் .வெங்காயம் தக்காளியை சிறிதாக நறுக்கி ஐந்து நிமிடம் வதக்கி ஆறவைக்கவும். பிறகு  பட்டை. கிராம்பு. ஏலக்காய் ஒரு பிடி கொண்டகடலை(சன்னா) சேர்த்து. மிக்ஸியில் நைஸாக அழைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு  காய்ந்ததும் .அரை ஸ்பூன் சோம்பு .ஒரு ஸ்பூன்  பூண்டு பேஸ்ட் .அரைத்த விழுது .வேகவைத்த கொண்டைக்கடலை.  ஒரு ஸ்பூன் மிளகாய்தூள்.ஒரு ஸ்பூன் மல்லித் தூள்  அரை ஸ்பூன் சீரகம் தூள்.அரை ஸ்பூன் மிளகு தூள். தேவையான அளவு உப்பு .ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி. குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கவும். சன்னா மசாலா ரெடி.

பெப்பர் பீஸ் மசாலா

 வெங்காயம் 4தக்காளி 5 வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் .வெங்காயம் தக்காளியை நன்றாக வதக்கி தட்டில் ஆறவைக்கவும் .பட்டாணி 2 கப் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும் .ஒரு ஸ்பூன் மிளகு . ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். குக்கரின் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணைய் காய்ந்ததும் பட்டை. 2 கிராம்பு. ஏலக்காய் 2 .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். சேர்க்கவும் பச்சை வாசனை போன பிறகு ஆறவைத்த வெங்காயம் தக்காளியை நைஸாக அரைத்து கலக்கவும்  வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கிளறவும் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் .மல்லித்தள் ஒரு டீஸ்பூன் .கறிவேப்பிலை. மஞ்சள் தூள் அரைடீஸ்பூன். கரம் மசாலா அரை டீஸ்பூன்  பொடித்து வைத்திருந்த மிளகு சீரகம் தேவையான அளவு உப்பு சேர்த்து. குக்கரில் 2 விசில் வைக்கவும் பெப்பர் பீஸ் மசாலா ரெடி.

பருப்பு அடை

 புழுங்கல் அரிசி ஒரு கப் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப் . துவரம்பருப்பு 1 கப் .உளுந்தம் பருப்பு அனரக் கப். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில்  சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரிசியுடன் இருபது காய்ந்த மிளகாய் .(தேவையான அளவு )பின் இரண்டு வெங்காயம் தேவையான அளவு உப்பு. பூண்டுப்பல் ஒரு பத்து .பெருங்காய பவுடர் ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை  நைசாக அரைத்து மாவில் கலக்கவும் .அடை மாவு ரெடி .தோசைக்கல்லை கல் காய்ந்ததும் ஊற்றி. இருபுறமும்  சிவக்க எடுக்கவும் வெண்ணெய். வெல்லம் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

மசால் வடை

கடலைப்பருப்பு1 கப் எடுத்து 2மணிநேரம் ஊரவைக்கவும் மிக்ஸியில்.கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.1வெங்காயம்  2 பச்சைமிளகாய். கருவப்பில்லை.மல்லி இலை. இஞ்சி ஒரு  துண்டு.உப்பு தேவையான அளவு. 1 ஸபூன் மைதா மாவு. .அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ததும் சிறிது சிறிதாக வடைத்தட்டி  எடுக்கவும்.மசால்வடை ரெடி. ப்மசமசால் வடைபருப்பு

பீஸ் மசாலா

         பட்டாணி ஒரு கப் . உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . எண்ணைய் காய வைத்து அதில் நான்கு பெரிய வெங்காயங்களை நறுக்கி பொன்னிறமாக வரும் வரை வதக்கி பின் மிக்ஸியில் அரைக்கவும் . குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் 50 கிராம் சேர்த்து உருகிய உடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட். அரைத்த வெங்காய விழுது. தக்காளி நான்கு பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின் அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள் .ஒரு ஸ்பூன் மல்லித் தூள் .அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் .வேகவத்த பட்டாணி. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி .குக்கரில் 3 விசில் வைத்து இறக்கவும் .சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து  பீஸ் மசாலா ரெடி 

குருமாப் பொடி

 ஒரு கப் துருவிய  தேங்காய். (டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்) அரை கப் பொட்டுக்கடலை .இரண்டு ஸ்பூன் சோம்பு. கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் நைஸாக அடித்து. ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும் . சப்பாத்தி குருமா செய்யும் போது வெங்காயம். பச்சைமிளகாய் .தக்காளி .காய்கறிகள். இஞ்சி பூண்டு பேஸ்டுடன். குருமா பவுடர் தேவையான அளவு சேர்த்து சிறிது தண்ணீர் .உப்பு சேர்த்து இரண்டு விசில் வைத்து.இறக்கவும் குருமா தயார் செய்யலாம்.

ரவாபொங்கல்

         ரவா1 கப்  லேசாக வறுக்கவும்.ஒரு கடாயில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு கொதி வந்தவுடன். ரவா சேர்த்து   வேக வைக்கவும். பின் வெல்லம் 2கப் சேர்க்கவும். அதில் 50 கிராம் நெய்யில் முந்திரி .திராட்சை .10 கிராம் ஏலக்காய்.சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். ரவா பொங்கல் ரெடி.

பால் பாயாசம்

 அரை லிட்டர் பால் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சவும். வடித்த  பச்சைரிசி சாதம் ஒரு கரண்டி எடுத்து. ஒரு கிண்ணத்தில் நன்கு கடைந்து விட்டு . அதை கொதிக்கும் பாலில் கலந்து விடவும் .அரை லிட்டர் பாலுக்கு அரை கிலோ சீனி.( உங்களுக்கு தேவையான அளவு ) சீனி போடவும் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து ஒரு வாணலியில் 100 கிராம் நெய் காய்ந்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு திராட்சையை வறுத்து அந்த பால்  பாயாசத்தில் கலக்கவும் ஏலக்காய் பவுடர் ஒரு பத்து கிராம் அளவிற்கு எடுத்து அந்த பயத்தில் கலக்கவும் இறுதியாக துளி உப்பு சேர்க்கவும் இப்பொழுது பால் பாயாசம் ரெடி

தக்காளி சட்னி பொடி

    கடலைப்பருப்பு 3 ஸ்பூன்  மிளகாய் 10.   சிறிது கருவேப்பிலை சேர்த்து நைசாக  அரைத்து  ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளவும் தேவையான போது .வெங்காயம்.தக்காளி வதக்கி  இந்த பவுடர் 2ஸ்பூன் .உப்பு சேர்த் து  . மிக்ஸியில்  நைசாக 1சுற்றை  அரைத்தால். தக்காளிச்சட்னி ரெடி

புதினாப்பொடி

        புதினா இலை-2கட்டு அலசி சுத்தம்செய்து ஈரம் போக நிழலில் காயவைக்கவும்.வாணலியில் 2ஸ்பூன் எண்ணைய் விட்டு அதில் 4 பச்சை மிளகாய்.3 ஸ்பூன் உலுந்தம் பருப்பு.  காய்ந்த மிளகாய்  2 . காய்ந்த புதினா சேர்த்து வறுக்கவும் உப்பு. கால் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு . அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சற்று கொர கொரப்பாக அரைக்கவும். புதினா பொடி ரெடி

சர்க்கரைப்பொங்கல்

         குக்கரில்1கப் பச்சரிசி  ,5 கப் தண்ணீர் பயத்தம்பறுப்பு 2ஸ்பூன் வறுத்து அதை சேர்த்து 4 விசில் வைத்து இறக்கவும்.அடுப்பில்2கப் வெல்லம்  தண்ணீர் விட்டு (சுத்தம் செய்து )அகலமான பாத்திரத்தில் வெல்லம் .வெந்த சாதத்துடன்சேர்த்து  நன்றாக கிளறவும். பிறகு முந்திரி 50கிராம் .திராட்சை 10.கிராம் நெய்யில் வறுத்துசேர்க்கவும்..பின் ஏலக்காய் பவுடர்10 கிராம்.துளி உப்பு .நெய் 200கிராம்.சேர்த்து .பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்போது இறக்கவும். சர்க்கரைப்பொங்கல் ரெடி.

பட்டாணி பன்னீர் மசாலா

          1 கப் பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இரண்டு பெரிய வெங்காயத்தை  பொடியாக நறுக்கி சேர்க்கவும் .தக்காளி 3 சிறிதாக அரிந்து சேர்க்கவும். அதில் ஒரு ஸ்பூன் மிளகு.1ஸ்பூன் மல்லித் தூள் .கரம் மசாலா அரை டீஸ்பூன். சீரகத்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து வதக்கவும் .அதனுடன் வேக வைத்த பட்டாணி. பன்னீர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு கிளறவும். 10 நிமிடம் மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும். அதை 5 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறவும். இரண்டு நிமிடம் மூடி வைத்து பின் ஒரு பாத்திரத்தில் மாற்றவும் பட்டாணி பனீர் மசாலா ரெடி

வெஜ் சால்னா

 குக்கரை அடுப்பில் வைத்து. இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் போட்டு நன்கு வதக்கவும். ஒரு கப் வெங்காயம் 1 த.க்காளி 2 நைசாக அறிந்து வதக்கவும் .ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் .ஒரு ஸ்பூன் மல்லித் தூள் .கால் டீஸ்பூன் கரம் மசாலா .அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் .உப்பு சேர்த்து நன்கு கிளறவும் .ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி மல்லி இலை முந்திரிப் பருப்பு 7 கசகசா .தேங்காய் துருவல் 3 ஸ்பூன் சேர்த்து நைசாக அரைத்து. வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து குக்கரின் மூடியை எடுத்து மூடி 2 விசில் விடவும்  .இப்ப வெஜ் சால்னா ரெடி. சப்பாத்தி .பரோட்டாவுடன் சாப்பிடலாம்.

பன்னீர்சப்பாத்தி

பன்னீர் சப்பாத்தி பன்னீர் 100கிராம் கோதுமை மாவு 2 கப்  கரம்மசாலா ஒரு ஸ்பூன் உப்பு யேவையான அளவு. அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்  பன்னீர் சப்பாத்தி மாவு ரெடி அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளை ஒரு அளவாக தேய்த்து இருபுறமும்  சிவக்க விட்டு எடுக்க வேண்டும் .பிறகு அதன் மேல் சிறிது நெய் தடவி அதில் வைக்கவும் சப்பாத்தி ரெடி வை அடுத்து சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சால்னா எப்படி செய்வது என்று  அடுத்த போஸ்ட்ல பார்க்கலாம் 

பயறுதோசை

 [ ] முதல் நாள் இரவே 1கப். பயரை தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் அதை கழுவி நன்கு சுத்தப்படுத்தி கிரைண்டரில் அரைக்கவும். அதில் 4 பச்சை மிளகாய். ஒரு துண்டு இஞ்சி. இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவு தேவையான உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி மாற்றவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து. தோசைக்கல்லை அடுப்பில் போட்டு சூடு வந்ததும். அதில்.அந்த பயறு மாவை எடுத்து நைசாக தோசை உத்தவும். பிறகு அதன் மேல் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவவும். பிறகு ஒரு முடி எடுத்து அதை (ஒரு பக்கமா மூட வேண்டும். ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். பயறு தோசை ரெடி தயிர் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மோர்க்குழம்பு

 வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு கப். அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த அரை மணி நேரத்திற்கு பிறகு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதில் 1  வெங்காயம். 2 பச்சை மிளகாய். தேவையான அளவு உப்பு சேர்த்து வடை மாவு ரெடி செய்து வைக்க வேண்டும். அரைக்க  1 ஸ்பூன் துவரம் பருப்பு.அரை ஸ்பூன் சீரகம். 1 ஸ்பூன் மல்லி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை வடித்து .பின்  ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் 3 பச்சை மிளகாய் .ஒரு துண்டு இஞ்சி . சேர்த்து  நைஸாக அரைக்கவும்.  அடுத்து இரண்டு கப் தயிரில் 500ml தண்ணீர் வைத்து இரண்டையும் நன்றாக கலக்கி அதில் அரைத்த துவரம் பருப்பு விழுதுகளை சேர்த்து.அடுப்பில் வைத்து ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்க விடவும் .மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியில் 250 எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிது சீரகம் .கடுகு . கருவேப்பிலை. பெருங்காய பவுடர் செய்து வைத்திருக்கும் வடையையும் அந்த மோர் குழம்பு சேர்த்து 2 நிமிடம் கொதிவந்ததும். அடுப்பை அணைத்து விடவும்.  மோர்க்குழம்பு ரெடி . உருளைக்கிழங்கு காரம் செய்து  சாப்பிட்டால் நன்றாக

ஆலு மசாலா

            ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு ஒரு பட்டை இரண்டு கிராம்பு ஒரு ஏலக்காய் சேர்த்து வறுக்கவும் பிறகு 2 வெங்காயம் 2 தக்காளி ஒரு துண்டு இஞ்சி 2 பல் பூண்டு சேர்த்து வதக்கி வைக்கவும் சூடு ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும் பிறகு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மிளகுத்தூள். சீரகமத்தூள் தலா ஒரு ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்.உருளைக்கிழங்கு இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வைக்கவும் சிறிது நேரம் கழித்து  2 நிமிடம் கொதிக்க வைக்கவும்  பிறகு நான்கு ஸ்பூன் நெய் சேர்க்கவும்  ஆலு மசாலா ரெடி

வாழைப்பழ சப்பாத்தி

          2 கப் கோதுமை மாவுடன். ஒரு வாழைப்பழம் .சிறிது உப்பு .தேவையான அளவு தண்ணீர் சேர்த்து. மிருதுவாக பிசைந்து 15 நிமிடம் மூடி வைக்கவும்பின்பு சப்பாத்திகளாக செய்து    மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும்.  வாழைப்பழ சப்பாத்தி ரெடி.

ரவா தோசை

ஒரு கப் ரவை. அரை கப் மைதா .அரிசிமாவு இவை மூன்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும் அடுப்பில் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு   சிறிது கடுகு. சீரகம்.  கடலைப்பருப்பு. பச்சை மிளகாய் 3. வெங்காயம்-2 காரட். பீன்ஸ்  இரண்டு ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும் பிறகு நன்கு வதங்கியதும். அதை கரைத்து வைத்திருக்கும் ரவா தோசை மாவில் சேர்க்கவும் .பிறகு தேவையான உப்பு சேர்க்கவும்.மாவு ரெடி கல்லை அடுப்பில் போட்டு கல் காய்ந்ததும்  மாவை  தோசையை கல்லில் சுற்றி ஊற்றவேண்டும் இரண்டு பக்கமும் வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் ரவா தோசை ரெடி

பூண்டு வத்தக்குழம்பு

   பூண்டு 50 கிராம்  (தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்)  மிளகு சீரகம் தலா ஒரு ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு கடுகு பருப்பு வெந்தயம் தலா அரை ஸ்பூன் புளி எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சுத்தம் செய்து தேவையான அளவு  எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு. வெந்தயம். துவரம்பருப்பு ஆகியவற்றை நன்றாக வதக்கவும். பிறகு  பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதனுடன் சேர்க்கவும்.  தேவையான அளவு உனக்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.மிளகு சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்து அதை பொடி செய்து அதில் சேர்க்க வேண்டும். சாம்பார் சாம்பார் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் சேர்த்து நன்கு கிண்டி  கொதிக்க வேண்டும். வந்தவுடன்  என்னை பிரிந்து தனியாக வரும் அப்பொழுது பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.இப்பொழுது பூண்டு வத்தக் குழம்பு ரெடி.

30 நாள் 30 சமையல்

              Day-------1 வாணலியில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு கடுகு வெடித்ததும் பிறகு பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி இவற்றை நன்கு வதக்கவும் பிறகுகேரட் உருளை பச்சைப்பட்டானி (எல்லாம் சேர்த்து 1 கப்) காய்கறிகள் இரண்டு நிமிடங்கள் வதக்க.வும் பிறகு தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு இரண்டரைக்கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ரவா 15 ஆம் தேதி 15 மாதங்கள் கூட இல்லை. ஒரு வேளை.

முந்திரி மசாலா

  முந்திரி -100 கிராம்.பச்சை பட்டானி -அரை கப்.வெங்காயம்- 2 .தக்காளி- 2-தேங்காப் பால் அரை கப். .எண்ணைய் 2 ஸ்பூன் .தேவையான அளவு உப்பு . மிக்ஸியில் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்.மல்லித்தூள் -1ஸ்பூன் இஞ்சி. பூண்டு சிறிது(இது தனியாக அரைக்கவும்) பிறகு முந்திரி 7.வெள்ளரி விதை 2அரை ஸ்பூன் கசகசா சேர்த்து( தனியாக அரைக்கவும்) பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு நறுக்கிய வெங்காயம். தக்காளி வதக்கவும்  பின்பு மிளகாய்த்தூள்.மல்லித்தூள்(சக்தி மசாலா) .இஞ்சி.பூண்டு(அரைத்த)சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பிறகு முந்திரி  பின்பு அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து பிறகு தேங்காய் பால். உப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்  பிறகு கரமசால் தூவி இறக்கவும்.இப்ப முந்திரி மசாலா ரெடி

பன்னீர்பட்டர் மசாலா

  வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு  அரை ஸ்பூன் சீரகம் வெங்காயம்  4  தக்காளி  4 ( சிறிதாக நறுக்கவும் )சேர்த்து வதக்கவும். பின்பு  மிக்ஸியில் நைசாக அறைக்கவும். மசாலா ரெடி.  பிறகு வாணலியை அடுப்பில் வைத்து  வெண்ணை 100 கிராம் போட்டு அதில் கரமசால் பவுடர்  அரை ஸ்பூன். மஞ்சத்துள் அரை ஸ்யூன். மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தேவையானளவு உப்பு சேர்த்து. பன்னீர் 100 கிராம் அளவு  சிறிய துண்டுகளாக  கட் செய்யவும்.(டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஐஸ் க்யூப் மாதிரி பன்னீர் வந்து கியூப் இருக்கும் அதையும் யூஸ் பண்ணலாம்)மசாலாவுடன் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில்  வைத்து இறக்கவும் .இப்ப  பன்னீர் பட்டர் மசாலா ரெடி. 

கார்லிக் நாண்

 நாண்  செய்வது எப்படினு பார்க்கலாம்.2 கப்  மைதா  சிறிதளவு ஈஸ்ட் . இப்ப அரை ஸ்பூன் ஈஸ்ட் எடுத்து 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு மைதாமாவில் ஈஸ்ட் (கரைந்ததும்) தேவையானளவு தண்ணீர் சேர்த்து  சப்பாத்தி மாவுப்போல் பிசைந்து.(சற்று தளர்வாக)அதன் மேல் எண்ணைத்தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும். இப்போது   தோசைக்கல் அடுப்பில் வைத்து கல் காயட்டும். அதற்குள் மாவுவை சப்பாத்திப்போல் தேய்த்து அதன்மேல் 2 பூண்டு நைசாக தூவி.சிறிது மல்லித்தழை தூவி  மறுபடியும் சப்பாத்திக்கட்டையால் தேய்த்து. தோசைக்கல்லில் போடவும்.அதில் 1ஸ்பூண்  வெண்ணைய் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து .ஒரு தட்டில் வைக்கவும். இப்ப கார்லிக் நாண் ரெடி. பட்டர் மட்டும் போட்டு செய்தால் அது பட்டர் நாண். அடுத்து பண்ணீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் என பார்க்கலாம்.

சமையல் புத்தகம்

.பின்ஸ் கேரட் .  பட்டாணி. உருளை. சீஸ்   இவையனைத்தும் தலா 1 கப்  நமக்குத் தேவையான அளவு தோசைமாவு. முதலில் வாணலியில் எண்ணைய் விட்டு சிறிது கடுகு .வெங்காயம் 1தக்காளிசேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு மிளகாய்த்தூள்  அரை ஸ்பூன் சீரகத்தூள் .சோம்புத்தூள்.கரமசால்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு  சீஸ். உப்பு. நைசாக நறுக்கிய காய்களையும் சேர்த்து 5 நிமிடம்  வதக்கவும்  இப்ப மசாலா ரெடி .பிறகு  தோசை ஊற்றி அதன் மேல் செய்த மசாலா வைத்து. அதன் மேல்1ஸ்பூன் நெய் விட்டு ஒரு பக்கம் மூடி தோசை வெந்ததும்.  எடுத்து இரண்டாக மடித்தால் மசால் தோசை ரெடி. தேங்காய் சட்னியுடன்  சாப்பிட நன்றாக இருக்கும்.

வெந்தையப்பொங்கல்

  சமையல் புத்தகம் வெந்தையப்பொங்கல். * ஒரு கப் பச்சைரிசியில் 5 கப் தண்ணீர் சேர்த்து.2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, குக்கரில் 5 விசில் வைத்து இறக்கவும். பின் ஒரு எண்ணைய்சட்டியில் 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன். மிளகு வறுத்துக்கொள்ளவும்.பிறகு 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு பச்சைமிளகாய்.சிறிது இஞ்சி சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து. பொங்களுடன் நன்றாக கிளறவும்.பிறகு தேவையான அளவு நெய் சேர்த்து. நெய் நன்றாக. பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்திவிடவும். வெந்தையப்பொடி தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

சமையல் புத்தகம்

பயத்தம்பருப்பு ஒரு டம்ளர் எடுத்து.பருப்பை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து.பிறகு மிக்ஸியில் உங்களுக்கு தேவையான அளவுக்கு பச்சைமிளகாய் சிறிது இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாவை மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசைக்கல் அடுப்பில் போட்டு தோசை ஊற்றி அதன் மேல் சிறிது நைசாக அறிந்து வெங்காயம் சேர்த்து. ஒரு பக்கம் மூடி எடுத்தால் பயறு தோசைரெடி. தேங்காய்சட்னி அல்லது தக்காளிசட்னி சாப்பிடலாம்.