பீஸ் மசாலா
பட்டாணி ஒரு கப் . உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . எண்ணைய் காய வைத்து அதில் நான்கு பெரிய வெங்காயங்களை நறுக்கி பொன்னிறமாக வரும் வரை வதக்கி பின் மிக்ஸியில் அரைக்கவும் . குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் 50 கிராம் சேர்த்து உருகிய உடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட். அரைத்த வெங்காய விழுது. தக்காளி நான்கு பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின் அதில் இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள் .ஒரு ஸ்பூன் மல்லித் தூள் .அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள் .வேகவத்த பட்டாணி. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி .குக்கரில் 3 விசில் வைத்து இறக்கவும் .சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து பீஸ் மசாலா ரெடி
கருத்துகள்