சன்னா மசாலா
முதல் நாள் இரவே சன்னா 2கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும் . காலையில் குக்கரில் இரண்டு விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு வெங்காயம் 3. தக்காளி 4 நறுக்கி ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் .வெங்காயம் தக்காளியை சிறிதாக நறுக்கி ஐந்து நிமிடம் வதக்கி ஆறவைக்கவும். பிறகு பட்டை. கிராம்பு. ஏலக்காய் ஒரு பிடி கொண்டகடலை(சன்னா) சேர்த்து. மிக்ஸியில் நைஸாக அழைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அரை ஸ்பூன் சோம்பு .ஒரு ஸ்பூன் பூண்டு பேஸ்ட் .அரைத்த விழுது .வேகவைத்த கொண்டைக்கடலை. ஒரு ஸ்பூன் மிளகாய்தூள்.ஒரு ஸ்பூன் மல்லித் தூள் அரை ஸ்பூன் சீரகம் தூள்.அரை ஸ்பூன் மிளகு தூள். தேவையான அளவு உப்பு .ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி. குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கவும். சன்னா மசாலா ரெடி.
கருத்துகள்