கோபி மசாலா
கொதிக்கும் வெந்நீரில் உப்பு சேர்த்து .அடுப்பை அணைத்துவிட்டு. காலிஃப்ளவரை 10 நிமிடம் வெந்நீரில் போட்டு காலிஃப்ளவரை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 3 தக்காளி .2 வெங்காயம் நன்கு வதக்கி ஒரு தட்டில் ஆறவைத்து. பின் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும். பட்டை . சோம்பு அரை ஸ்பூன். இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்.அரைத்த வெங்காயம் தக்காளி.ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள். ஒரு ஸ்பூன் மல்லித் தூள். அரை ஸ்பூன் கரம் மசாலா. அரை ஸ்பூன் மஞ்சள் தூள். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .பிறகு சுத்தம் செய்த காலிஃப்ளவர் அரை டம்ளர் தண்ணீர் அதனுடன் சேர்த்து.பச்சை வாசனை போன பிறகு. எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது இறக்கவும். கோபி மசாலா ரெடி.
கருத்துகள்