தேங்காய் இல்லாத குருமா +பீஸ் மசாலா
வெங்காயம் 3 வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி ஆற வைக்க. கிராம்பு 3 .பட்டை ஒரு துண்டு. பொட்டுகடலை சிறிது (இல்லன்னா) முந்திரி பருப்பு 8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். இது எல்லாத்தையும். ஆற வைத்த வெங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தது.ம் சிறிது சோம்பு .இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்லா வதக்கி. (பச்சை வாசனை போக) அப்புறம் ஒரு கப் பச்சை பட்டாணியை சேர்த்து நல்லா வதக்கவும். மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த கிரேவி சேர்த்து. தேவையான அளவு உப்பு காரம் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைங்க. சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து. அதுக்கப்புறம் அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி .ஒரு பாத்திரத்தில் மாற்றி 1கரண்டி தயிர் (உங்களுக்கு விருப்பமான அளவு )அதுல சேருங்க. பீஸ் மசாலா ரெடி.
கருத்துகள்