டிபன் சுண்டல்
ஒரு கப் பச்சரிசி. அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் லேசாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை அடுப்பில் வைத்து.. இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் கடுகு. உளுத்தம்பருப்பு. பச்சை மிளகாய்.5. வெங்காயம் 2.கடலைப்பருப்பு. இஞ்சி. கருவேப்பிலை. தேவையான அளவு உப்பு.( விருப்பப்பட்டால் காய்கறிகள் கேரட். உருளைக்கிழங்கு .பட்டாணி. உங்கள் விருப்பம் போல சேர்த்துக்கொள்ளலாம்.) சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிக்ஸியில் நாம் வறுத்து வைத்திருந்த பச்சரிசியை இரண்டு ஒன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து. குக்கரில் வதக்கி வைத்திருக்கும் கலவையுடன். ஒரு கப் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் வைத்து. 3 விசில் வைத்து இறக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லித் தழை தூவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுண்டல் ரெடி. விருப்பப்பட்டால் தேங்காய் ஒரு மூடி துருவி. பரிமாறும்போது அதன் மேல் போட்டு. ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இல்லை என்றால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஊறுகாய். இவற்றுடன் சாப்பிடலாம்.
கருத்துகள்