அடை மிக்ஸ்
கடலைப்பருப்பு 500 கிராம். துவரம் பருப்பு 250 கிராம். உளுத்தம் பருப்பு 150 கிராம். மிளகாய் 100 கிராம் இவை அனைத்தையும் நைசாக அரைத்து . டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். அடை ஊற்றுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு. தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வெங்காயம். பச்சை மிளகாய். இஞ்சி நைஸாக அரிந்து போடவும். பெருங்காயத்தூள். கருவேப்பிலை. உப்பு சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும். தோசைக்கல்லைகாயவைத்து .கல் காய்ந்ததும் அதில் உங்கள் விருப்பம் போல் நைசாக அடை ஊற்றவும். இரண்டு புறமும் வெந்ததும் ஒரு பிளேட்டில் வைத்து தேங்காய் சட்னி. அவியல். வெண்ணெய் வெல்லம் தொட்டு சாப்பிடும்போது நன்றாக இருக்கும் .அடை ரெடி .அடை மிக்ஸ் செய்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
கருத்துகள்