இனிப்பு பொரி கார்த்திகை ஸ்பெஷல்
பொரி ஒரு கப்( நெல் பொரி அல்லதுஅவல் பொரி) அடுப்பை ஆன் பண்ணுங்க. வாணலியை அடுப்பில் வைத்து மொரமொர என பொரியை சூடு செய்து பாத்திரத்தில் வைத்து விடுங்கள். பொட்டுகடலை. எள்ளு. தேங்காய் துருவி சிவக்க வறுத்து பொரியுடன் சேருங்கள் .2கப் வெல்லம் சுத்தம் செய்து பாகு காய்ச்சி. (ஒரு தட்டில் தண்ணீர் வைத்து காய்ச்சிய பாகுவை அதில் விடுங்க அந்த வெல்லம் கையில் எடுக்கும் போது. பந்து போல் உருண்டு வரும் ) வெல்லப்பாகு எடுத்து பாத்திரத்தில் வைத்துள்ள பொரியுடன் சேருங்கள். நல்லா கிளறி சூடு ஆறுவதற்க்குள்.அரிசி மாவு தொட்டு உருண்டைகளாக பிடித்து அடிக்கடி வைக்கவும். (பொரி ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க வராது அப்படி இல்லை என்றால் சூடாக இருக்கும்போதே பொரியை அழுத்தி மூடி வைக்கவும்) கார்த்திகை பொரி ரெடி.
கருத்துகள்