இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோயா பிரியாணி ரெடி

தேவையானவை: பச்சரிசி - 2 கப், சோயா சங்க்ஸ் - 100 கிராம், பச்சை மிளகாய் - 3, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு - தலா 3, எண்ணெய் - 4 டீஸ்பூன், கொத்துமல்லி மேலே தூவுவதற்கு சிறிது, உப்பு - தேவையான அளவு. செய்முறை: இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் அதில் சோயாவைப் போட்டு, சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் சோயாவை எடுத்து ஆறவைத்து பிறகு நீரை பிழிந்து விடவும்.. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு சில நொடிகள் வதக்கவும். பச்சை வாடை சற்று போனவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சோயாவை அதில் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும். இரண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து, இதனுடன் அரிசி, சோயா கலவை, உப்பு சேர்த்து கிளறிவிட்டு, குக்கரை மூடி வேக விடவும். (ஒரு கப் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு பதிலுக்கு ஒரு கப் தேங்காய்ப்பால் கூட சேர்க்கலாம்) மூன்று விசில் வந்தவுடன் இறக்கி, ஆவி அடங்கியவுடன் எட

பன்னீர்நூடுல்ஸ் ரெடி

தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு கப், பன்னீர் 100 கிராம், வெங்காய விழுது, தக்காளி விழுது - தலா கால் கப், தயிர் 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் 1, மஞ்சள்தூள், சீரகத்தூள் தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் தலா அரை டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது, தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு பாதியளவு வேகவைத்து நீரை வடிக்கவும். பின் அதை குளிர்ந்த நீரில் அலசி நீரை வடிய விடவும். அகலமான கடாய் ஒன்றில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சைமிளகாயை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காய விழுது, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி விழுதுஅல்லது தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் பன்னீர் (க்யூப் )சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். கலவையில் நீர் வற்றி கெட்டியாக வந்ததும் நூடுல்ஸைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.

கொத்துமல்லி பிரியாணி தயார்..

தேவையானவை: பாசுமதி அரிசி ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2. வெங்காயம் - 1, எண்ணெய் 2 டேபிள்ஸ்யூன், தேங்காய்ப்பால் - அரை கட்ட கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பிரியாணி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. அரைக்க: . பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு. 6.தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன். பட்டை லவங்கம் - தலா 2. செய்முறை: அரைக்க கொடுத்தவற்றை நைஸாக அரைக்கவும். அரிசியைக் களைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா மற்றும் தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் தேங்காய்ப்பால் ஊற்றி மீதத்திற்கு நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க துவங்கியதும் அரிசி சேர்த்து கலந்து விடவும். மீண்டும் கொதிக்க துவங்கியதும் மூடி சிறு தீயில் வைத்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவ

சப்பக்கி இட்லி & சாமை இட்லி

 தேவையானவை: இட்லி அரிசி ரவை, நைலான் ஜவ்வரிசி தலா ஒரு கப், புளித்த தயிர் - 2 கப், தேங்காய்த்துருவல் - கால் கப், கடுகு ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 5, முந்திரி - 20, கறிவேப்பிலை - 2 கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, உப்பு, தண்ணீர் - தேவைக்கு. செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி ரவை, ஜவ்வரிசி, புளித்த தயிர், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்தை விட சற்று நீர்க்க கரைக்கவும். இந்த மாவை 8 மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் இதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் கடுகு தாளித்து, முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் தேங்காய்த்துருவலை சேர்த்து கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் லேசாக எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, 12 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.  சாமை இட்லி தேவையானவை: சாமை - 4 கப், உளுந்தம் பருப்பு ஒரு கப வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - செய்முறை: சாமையை மூன்று மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும். உளுந்தம் பருப்பையும் வெந்தயத்தையும் சேர்த