மட்டர் பன்னீர் மசாலா
பட்டாணி ஒரு கப் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு. காய்ந்ததும் பட்டை. சீரகம். ஏலக்காய் .கிராம்பு .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து .அதில் இரண்டு தக்காளி. 2 வெங்காயத்தை நைசாக பொடி செய்து சேர்க்கவும். பிறகு அதில் 1. ஸ்பூன் மிளகாய்தூள். 1 ஸ்பூன் மல்லித் தூள். அரை ஸ்பூன் சீரகம்.கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்.உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி.100 கிராம் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 10 முந்திரிப்பருப்பை நைசாக அரைத்து.குக்கரில் உள்ள கிரேவியில் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.எண்ணெய் பிரிந்து வெளியில் வரும்போது இறக்கவும்மட்டர் பன்னீர் மசாலா ரெடி. பாத்திரத்தில் மாற்றி இரண்டு ஸ்பூன் நெய் விடவும்.