தம் ஆலு
உருளைக்கிழங்கு 500 கிராம் தோல் சீவி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி. எண்ணெய் காயவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 5 காய்ந்த மிளகாய் .ஒரு டீஸ்பூன் மிளகு. ஒரு டீஸ்பூன் சீரகம். பட்டை. கிராம்பு. வெறும் வாணலியில் வறுத்து. மிக்ஸியில் நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு. அதில் இஞ்சி. பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். வெங்காயம் கால் கிலோ அளவுக்கு பொடிதாக நறுக்கி வதக்கவும் .அதில் இரண்டு தக்காளி பழம் நறுக்கி வதக்கவும். பிறகு 2 ஸ்பூன் தயிர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும் .நன்கு சுருண்டு வரும்போது. உருளைகிழங்கை அதில் சேர்த்து( உப்பு காரம் அனைத்தும் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளவும்) 10 நிமிஷம் அதை சிம்மில் வைத்து. எண்ணைய் பிரிந்த சுருண்டு வரும்போது இறக்கவும். தம் ஆலு ரெடி.
கருத்துகள்